பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து இன்று ஓய்வுபெறும் காலத்தை எட்டியுள்ள பெற்றோருக்கு எவ்வாறு உதவலாம்?
வயதான காலத்தில் வசதியாக, நிம்மதியாக வாழ அவர்களுக்கு நாம் உதவலாம். இன்றைய இளம் தலைமுறையினர் அவர்களுடைய பெற்றோரின் நிதியை நிர்வகிப்பதோடு அவர்களுடைய நிதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவலாம்.
பெற்றோரின் ஓய்வுக்காலம் எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்க மத்திய சேம நிதி (மசேநிதி) கணக்குகளில் உள்ள நிதியிருப்பைக் கவனிக்கலாம். அவர்களின் மத்திய சேம நிதியை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பது குறித்து அறிந்தால், அதற்கேற்ப பிள்ளைகள் அவர்களுடைய பெற்றோருக்கு ஆலோசனை வழங்கலாம் என்கிறார் எண்டொவஸின் முதன்மை முதலீட்டு ஆலோசனை அதிகாரி ஹக் சுங்.
பிள்ளைகளும் வயதான பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு முக்கியக் குறிப்புகளையும் எடுத்துரைக்கிறார் ஹக்.
சிறந்த ஓய்வுக்காலத் திட்டங்களில் ஒன்றாக மசேநிதி
2025லிருந்து 55 வயதுக்கு உட்பட்டவர்களின் சிறப்புக் கணக்குகள் மூடப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மசேநிதி, சிறந்த ஓய்வுக்காலத் திட்டங்களில் ஒன்றாக இருந்தாலும், அதில் உள்ள பல கொள்கைகளும் திட்ட மாற்றங்களும் சில சமயங்களில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
மசேநிதி, சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் ஓய்வுக்காலத்தில் நிதிப் பாதுகாப்பை வழங்கும். வீடு, கல்வி, காப்பீடு மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
சம்பளத்தின் ஒரு பகுதி மசேநிதி சாதாரணக் கணக்கிலும் சிறப்புக் கணக்கிலும் பங்களிக்கப்படும். சாதாரணக் கணக்கு 2.5% வட்டியும் சிறப்புக் கணக்கு 4.08% வட்டியும் பெறும்.
தொடர்புடைய செய்திகள்
55 வயதை எட்டியவுடன், உங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை நீங்கள் திரும்பப் பெறலாம். மேலும், உங்களிடம் முழு ஓய்வுக்கால தொகை (FRS) அதிகமாக இருந்தால், நீங்கள் அதைவிட அதிகமான தொகையை திரும்பப் பெறவும் தேர்வு செய்யலாம்.
அதில் பெரும்பகுதி ஓய்வுக்கால கணக்கிற்குச் செல்கிறது. அதன் பிறகு சிபிஎஃப் லைஃப் மூலம் வாழ்நாள் முழுவதும் மாதாந்திர வழங்குதொகை பெறலாம்.
65 வயதில் சிபிஎஃப் லைஃப் திட்டத்திற்கு நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், வாழ்நாள் முழுவதும் மாதாந்திர வழங்குதொகை பெறுவதற்கான உத்தரவாதத்தை இது கொடுக்கிறது. தனியார் காப்பீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது இது நீங்கள் பெறக்கூடிய சிறந்த ஓய்வுக்காலத் திட்டமாக அமைகிறது.
சிபிஎஃப் லைஃப் திட்டத்தின் நுணுக்கங்கள்
வழங்குதொகையைப் பெறுவதற்கான வயது 65ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்ற சிபிஎஃப் லைஃப் திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். தேர்வுசெய்ய மூன்று திட்டங்கள் உள்ளன: அடிப்படைத் திட்டம், நிலையான திட்டம், அதிகரிக்கும் திட்டம்.
நிலையான திட்டம், ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு மாதாந்திர தொகையை வழங்குகிறது. நீங்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்த தொகையை வழங்கும் அடிப்படைத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். அது, உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உயிலில் அதிகம் விட்டுச்செல்ல அனுமதிக்கிறது.
வழங்குதொகையைக் குறைந்த அளவில் தொடங்கவும் பின்னர் அது படிப்படியாக உயரவும் அதிகரிக்கும் திட்டத்தைத் தேர்வுசெய்யலாம். பணவீக்கத்திற்கு ஏற்ப படிப்படியாக கூடுதல் வழங்குதொகையைப் பெறலாம்.
உங்கள் பெற்றோர் தொடர்ந்து வேலை செய்தால் ஓய்வுபெறும் வரை அல்லது 70 வயதை எட்டும் வரை அவர்கள் சிபிஎஃப் லைஃப் திட்டத்தை ஒத்திவைக்கலாம். இதைச் செய்தால், தேவையான சமயங்களில் 7% கூடுதல் மாதாந்திர வழங்குதொகையை அவர்கள் பெறலாம்.
மசேநிதி இருப்பை அதிகரிக்க வேண்டும்
ஓய்வுபெறுவதற்கு முன் போதுமான நிதியிருப்பை வைத்திருப்பது, சிபிஎஃப் லைஃப் அனுகூலங்களைப் பெற முக்கியமானதாகும். நீங்கள் பெறும் வழங்குதொகை, உங்கள் மத்திய மசேநிதியில் உள்ள தொகையைப் பொறுத்தது.
சம்பளத்தின் மூலம் மத்திய சேமநிதி இருப்பை அதிகரிப்பதே முதன்மை வழி என்றாலும், அதற்கு மற்ற வழிகளும் உள்ளன. உங்கள் பெற்றோரின் மசேநிதி பங்களிப்புகள் ஆண்டு வரம்பான $37,740ஐ எட்டவில்லை என்றால் ஓய்வுக்காலத் தொகையை நிரப்பும் திட்டம் அல்லது தன்னார்வப் பங்களிப்புகள் மூலம் பங்களிக்கலாம்.
ஓய்வுக்கால நிதிப் பாதுகாப்பு என்பது சிபிஎஃப் லைஃப் திட்டத்தின் வழங்குதொகையால் மட்டுமல்ல, அது மருத்துவத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ், மெடிசேவ் கணக்கிற்கான பங்களிப்புகள் இடம்பெறலாம்.
அதில் பங்களிப்போருக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மசேநிதியின் மூன்று கணக்குகளுக்கு அளிக்கப்படும் தன்னார்வப் பங்களிப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
சிபிஎஃப் லைஃப் ஓய்வுக்காலத்துக்குப் போதுமா?
உங்கள் பெற்றோருக்கு மசேநிதி, சிபிஎஃப் லைஃப் திட்டத்தின்கீழ் தெளிவான பலன்கள் உள்ளன. இருப்பினும், இது அவர்களின் ஓய்வுக்காலத் தேவைகளுக்கு மட்டுமே அடித்தளமாக அமைய வேண்டும்.
சிபிஎஃப் லைஃப் மதிப்பீட்டாளரின் சரிபார்ப்பிற்கு ஏற்ப, 2020ல் முழு ஓய்வுக்கால தொகையாக ($181,000) வைத்திருப்பது, வாழ்நாள் முழுவதும் $1,390 மற்றும் $1,490 வரையிலான மாத வழங்குதொகையை மட்டுமே வழங்குகிறது என்பதைக் காட்டுகிறது.
இது, ஒரு மாதத்திற்கு $1,379 என்ற குறைந்தபட்ச வருமான தரநிலையைவிட அதிகமாக உள்ளது. லீ குவான் யூ பொதுக் கொள்கை பள்ளியைப் பொறுத்தவரை, வயதான சிங்கப்பூரர்களுக்கு இந்தத் தொகை, அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்ய உதவுகிறது.