கிருமி நாசினிக்குப் பதிலாக மதுபானத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தும் ஜப்பான் சுகாதார அமைச்சு

நேப்பாளத்தில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் ஒருவர் கிருமிநாசினியை வழங்கும் படம்: ஏஎஃப்பி

கொரோனா கிருமிப் பரவலை தடுக்க ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு அமைப்புகளும் அரசாங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.

கிருமி நாசினியை பல நாடுகள் லாரிகளில் வைத்து பெருமளவில் தெளித்து வருகின்றன.

ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜப்பானிலும் தற்போது கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

ஒவ்வொரு கிருமி நாசினியிலும் 40 முதல் 80% வரை ‘ஆல்கஹால்’ எனப்படும் மதுபானம் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, கிருமி நாசினிக்கு பதிலாக மதுபானத்தையே நேரடியாகப் பயன்படுத்த ஜப்பான் சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி மதுபானங்களில் ஒருவகையான ‘வோட்காவை ‘கிருமிநாசினியாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமி நாசினியைவிட நேரடியாக பயன்படுத்தப்படும் வோட்காவுக்கு வீரியம் அதிகம் என்று கூறப்படுகிறது.

எனவே வோட்காவை நேரடியாக பயன்படுத்துவதைவிட அதனை தண்ணீருடன் கலந்து கைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்த ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொவிட்-19
ஜப்பான்
கிருமி நாசினி
மது
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!