அன்புள்ள கும்ப ராசிக்காரர்களே,
இவ்வாரம் இடம்பெயரும் சுக்கிரனின் மங்கலத்தன்மை சிறக்கும். குருபலம் உண்டு. புதன், சந்திரனின் ஆதரவு கிட்டும். சனி, ராகு, கேது, சூரியன், செவ்வாய் வகையில் சங்கடங்கள் இருக்கும்.
விருப்பு வெறுப்பின்றி அனைவரையும் அரவணைக்கும் பண்பாளர்க்ள நீங்கள். இவ்வாரம் உங்கள் எண்ணம்போல் சில விஷயங்கள் நடந்தேறும். கடினம் எனக் கருதிய பணிகள் எளிதில் கைகூடும். அதேசமயம் எளிதான பணிகள்கூட இழுத்தடிக்கும். உங்களுக்குரிய ஆதாயங்கள் கைமேல் கிட்டும் என்பது நற்செய்தி. சிலருக்குப் புதிய வாய்ப்புகளும் பொறுப்புகளும் தேடிவரும். சக்திக்குட்பட்டவற்றை ஏற்பதில் தயக்கம் வேண்டாம். வருமான நிலை மனநிறைவு தரும். கையிருப்பைக் கொண்டு தனிப்பட்ட, குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இயலும். விலகிச் சென்ற நண்பர்கள் தேடிவருவர். உறவு வகையில் சில தொல்லைகள் நீடிக்கும். உடல்நலனில் கூடுதல் அக்கறை தேவை. குறிப்பாக, உழைப்புக்குரிய ஓய்வு அவசியம். பணியாளர்களும் வியாபாரிகளும் உழைப்புக்கேற்ற வளர்ச்சியைக் காண்பர். வார இறுதியில் பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. இச்சமயம் அறிமுகமற்றவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டாம்.
குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தோர் உற்ற துணையாய் இருப்பர்.
அனுகூலமான நாள்கள்: மார்ச் 3, 4
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

