பத்ரி இயக்கத்தில், பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'நாங்க ரொம்ப பிசி'. முதல்முறையாக தீபாவளி அன்று, நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகிறது.
படம் குறித்து, பத்ரி அளித்த பேட்டியில், "திரையரங்குகளில் வெளியாவதைவிட, படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது மகிழ்ச்சியே. இதனால் முதல் நாளே, 4 முதல் 5 கோடி மக்கள் படத்தைப் பார்க்க உள்ளனர்.
பல நடிகர்கள் நடிக்கும் படம் என்றாலே நடிகர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் நடித்த அனைவரும் நட்புடன் இருந்ததால் எனக்கு இயக்குவது எளிதாக இருந்தது," என்று அவர் கூறினார்.

