நான்சி பெலோசி வீட்டில் பன்றி தலை, கிறுக்கல்கள் என நாசவேலை

நான்சி பெலோசி வீட்டில் பன்றி தலை, கிறுக்கல்கள் என நாசவேலை

1 mins read

நியூ­யார்க்: அமெ­ரிக்க காங்­கி­ர­சின் அதிக சக்­தி­வாய்ந்­த­வர்­க­ளான செனட்­டர் மிட்ச் மெக்­கா­னல் மற்­றும் நாடா­ளு­மன்ற நாய­கர் நான்சி பெலோ­சி­யின் வீடு­க­ளில் சிலர் நாசவேலையில் ஈடுபட்டனர்.

வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை வேளை­யில் இச்­சம்­ப­வம் நடை­பெற்­ற­தா­கக் கூறப்­

ப­டு­கிறது.

குடி­ய­ரசு கட்­சி­யி­ன­ரின் கொவிட்-19 நிவா­ரண தொகையை அதி­க­ரிக்­கும் மசோதா மீதான விவா­தத்­திற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து இந்த நாசவேலை நடந்­துள்­ளது.

மெக்­கா­னல் வீட்­டின் முன்­பக்­கத்­தில் 'என்­னு­டைய பணம் எங்கே' என்று கிறுக்­கப்­பட்­டுள்­ளது.

சான் பிரான்­சிஸ்­கோ­வில் உள்ள நான்சி பெலோ­சி­யின் வீட்டு சுவற்­றில் ஸ்பிரே பெயிண்­டால் கிறுக்­கப்­பட்­டி­ருந்­த­தோடு பன்­றித் தலை ஒன்­றும் வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அது உண்­மை­யா­னதா அல்­லது போலி­யான பன்­றித் தலையா என்­பது குறித்து போலி­சார் தரப்­பில் எந்த விவ­ர­மும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. இச்சம்பவங்களைச் செய்தவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.