நியூயார்க்: அமெரிக்க காங்கிரசின் அதிக சக்திவாய்ந்தவர்களான செனட்டர் மிட்ச் மெக்கானல் மற்றும் நாடாளுமன்ற நாயகர் நான்சி பெலோசியின் வீடுகளில் சிலர் நாசவேலையில் ஈடுபட்டனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்
படுகிறது.
குடியரசு கட்சியினரின் கொவிட்-19 நிவாரண தொகையை அதிகரிக்கும் மசோதா மீதான விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நாசவேலை நடந்துள்ளது.
மெக்கானல் வீட்டின் முன்பக்கத்தில் 'என்னுடைய பணம் எங்கே' என்று கிறுக்கப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நான்சி பெலோசியின் வீட்டு சுவற்றில் ஸ்பிரே பெயிண்டால் கிறுக்கப்பட்டிருந்ததோடு பன்றித் தலை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
அது உண்மையானதா அல்லது போலியான பன்றித் தலையா என்பது குறித்து போலிசார் தரப்பில் எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இச்சம்பவங்களைச் செய்தவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.

