சிங்கப்பூரில் கட்டுமானத் துறை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ஆளில்லா வானூர்திகளும் இயந்திர மனிதர்களும் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு முகவை அமைப்பும் (A*Star) சேர்ந்து அந்த ஆய்வை நடத்தும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று அறிவித்தார்.
5ஜி தொழில்நுட்பத்தின் விளைவாக இயந்திர மனிதர்கள் மூலம் கட்டுமானத் திட்டங்கள் வேகமாகவும் செம்மையாகவும் இடம்பெற உதவி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

