12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி; முக்கிய தேர்வுகளை எழுதவுள்ளோருக்கு முன்னுரிமை 400,000 மாணவர்களுக்கு தடுப்பூசி

12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி; முக்கிய தேர்வுகளை எழுதவுள்ளோருக்கு முன்னுரிமை 400,000 மாணவர்களுக்கு தடுப்பூசி

3 mins read

பன்­னி­ரண்டு வய­துக்­கும் அதற்­கும் மேற்­பட்ட சுமார் 400,000 மாண­வர்­க­ளுக்கு, தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அழைப்பு விடுக்­கப்­படும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

குறிப்­பாக, வழக்­க­நிலை, சாதா­ரண நிலை, மேல்­நிலை தேர்வு எழு­தும் மாண­வர்­களும் அதற்கு ஒப்­பான தேர்­வு­கள் எழு­தும் மாண­வர்­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முத­லில் அழைக்­கப்­ப­டு­வார்­கள்.

மாண­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்கு இன்று 1ம் தேதி­யி­லி­ருந்து பதிந்­து­கொள்­ள­லாம்.

வரும் 3ம் தேதி­யி­லி­ருந்து தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்ள முடி­யும்.

பிர­த­மர் திரு லீ சியன் லூங் நேற்று தொலைக்­காட்­சி­யில் நாட்டு­ மக்­க­ளுக்கு ஆற்­றிய உரை­யில் மாண­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி திட்­டம் பற்றி முத­லில் அறி­வித்­த­தைத் தொடர்ந்து கல்வி அமைச்சு அது குறித்த மேல்­வி­வ­ரங்­களை வெளி­யிட்­டது.

அண்­மைய கொவிட்-19 பர­வ­லில் மாண­வர்­க­ளுக்கு கிரு­மி தொற்­றிய சம்­ப­வங்­கள் அதி­க­மா­ன­தைத் தொடர்ந்து அவர்­க­ளுக்­கான தடுப்­பூசி நட­வ­டிக்கை எடுக்­கப்­படு­கிறது.

இவ்­வாண்டு ஏப்­ரல் 15லிருந்து இது­வரை பாலர்­பள்­ளி­கள், தொடக்­கப் பள்­ளி­கள், உயர்­நி­லைப் பள்­ளி­கள், உயர்­கல்வி நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றில் 70க்கும் மேற்­பட்ட பிள்­ளை­க­ளுக்கு கொவிட்-19 கிருமி தொற்­றி­யுள்­ளது.

கடந்த ஆண்டு இதை­விட குறை­வான பிள்­ளை­களையே கொவிட்-19 கிருமி தொற்­றி­யது.

மாண­வர்­க­ளுக்கு பெரும்­பா­லும் துணைப்­பாட நிலை­யங்­க­ளி­லும் பள்­ளி­க­ளி­லும் கிருமி தொற்­றி­யது. இத­னைத் தொடர்ந்து மே மாத தொடக்­கத்­தில் பள்­ளி­கள் வீட்­டி­லி­ருந்­த­படி வகுப்­பு­களை நடத்­தும் முறைக்கு மாறின.

"பிள்­ளை­க­ளுக்கு மோச­மான பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை. இருப்­பி­னும் பெற்­றோர் கவ­லைப்­பட்­ட­னர். அத­னால் மாண­வர்­க­ளுக்குத் தடுப்­பூசி போட ஜூன் மாத விடு­மு­றை­யைப் பயன்­ப­டுத்­திக் கொள்ள இருக்­கி­றோம்," என்று பிர­த­மர் லீ தமது தொலைக்­காட்சி உரை­யில் கூறி­னார்.

முத­லில், இவ்­வாண்டு பிற்­ப­குதி­ யில் வழக்­க­நிலை, சாதா­ரண நிலை, மேல்­நிலை போன்ற முக்­கிய தேர்­வு­களை எழு­த­வுள்ள சுமார் 56,000 மாண­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக் கொள்­வ­தற்கு அழைப்பு விடுக்­கப்­படும்.

தேசிய தேர்­வு­கள் வர­வி­ருப்­ப­தால், தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக் கொள்­ளும் தேதி­யை­யும் நேரத்­தை­யும் குறித்­துக்­கொள்­வ­தில் மாண­வர்­க­ளுக்கு அதிக நீக்­குப்­போக்கு கிடைப்­பதே அதன் நோக்­கம் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

அடுத்த இரண்டு வாரங்­களில் படிப்­ப­டி­யாக, மற்ற முழு­நேர மாண­வர்­களும் தடுப்­புசி போட்­டுக்­கொள்ள கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வார்­கள்.

மத­ரஸாக்­கள், சிறப்­புத் தேவை­யுள்­ள­வர்­க­ளுக்­கான பள்­ளி­கள், ஹுவா சோங், ஆங்­கிலோ சீனப் பள்ளி, செயிண்ட் ஜோசஃப் பள்ளி போன்­ற­வற்­றின் அனைத்­து­ல­கப் பிரி­வு­களில் உள்ள மாண­வர்­கள் அவர்­களில் அடங்­கு­வார்­கள்.

பெரும்­பான்­மை­யான மாண­வர்­கள் தடுப்­பூ­சிக்­கான தேசிய பதி­வு­ முறை இணை­யத்­த­ளத்­தில் சென்று பதிந்­து­கொள்­ள­லாம். அது குறித்து பெற்­றோ­ருக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் குறுஞ்­செய்தி அனுப்­பப்­படும்.

பதினெட்டு வயதுக்கு குறைவானவர்களுக்கு ஃபைசர்

18 வய­துக்­கும் மேற்­பட்ட மாண­வர்­க­ள் ஃபைசர் அல்­லது மொடர்னா தடுப்­பூசி இரண்­டில் ஒன்­றைப் போட்­டுக் கொள்ள தேர்வு ­செய்­ய­லாம். ஆனால் 12 முதல் 17 வய­தி­லான மாண­வர்­கள் ஃபைசர் தடுப்­பூ­சியை மட்­டும் தான் பெற முடி­யும்.

மொடர்னா தடுப்­பூ­சியை 18 வய­துக்கு கீழ் உள்ள பிள்ளைகளுக்குச் செலுத்த இன்­னும் அனு­மதி இல்லை என்­பதே அதற்­குக் கார­ணம்.

பன்­னி­ரண்டு முதல் 17 வய­துள்ள பிள்­ளை­க­ளுக்கு ஃபைசர் தடுப்­பூசி பாது­காப்­பா­னது என்று சுகா­தார அமைச்­சின் மருத்­துவ இயக்­கு­நர் டாக்­டர் கென்­னத் மாக் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே மாண­வர்­க­ளுக்கு தடுப்­பூசி செலுத்­து­வ­தற்கு நான்கு நிலை­யங்­கள் அமைக்­கப்­படும். அங் மோ கியோ, சுவா சூ காங், சீமெய் தொழில்­கல்வி நிலைய வளா­கங்­க­ளி­லும் ராஃபிள்ஸ் மாநாட்டு நிலை­யத்­தி­லும் அவை அமைந்திருக்கும்.