சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தபோதும், வரும் மாதங்களில் பயணங்களை மேற்கொள்ள சிங்கப்
பூரர்களை அனுமதிப்பதில் நோய் அபாய அடிப்படையிலான அணுகுமுறையே கடைப்பிடிக்கப்படும்.
நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி, பாதுகாப்பானவை என்று வகைப்படுத்தப்படும் நாடுகளிலிருந்து வருவோர், அவர்கள் சிங்கப்பூரர்களாக இருந்தாலும் சரி, பயணிகளாக இருந்தாலும் சரி, சிங்கப்பூரில் வந்திறங்கியதும் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்.
ஆனால், இதற்கு மாறாக, பாதுகாப்பற்றவை என்று வகைப்படுத்தப்படும் நாடுகளிலிருந்து வருவோர் குறிப்பிட்ட தங்குவிடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவர்.
இதை நேற்று தமது மெய்நிகர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த நிதியமைச்சர் லாரன்ஸ் வோங், கொவிட்-19 கொள்ளைநோய் வந்ததிலிருந்து இதுவே அரசின் அணுகுமுறையாக இருந்ததை சுட்டினார்.
இதற்கு வெவ்வேறு நாடு களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள வெவ்வேறு நடவடிக்கைகளே சான்று என்றும் அவர் கூறினார்.

