சமூகத்தில் 16 பேருக்கு கிருமித்தொற்று

சமூகத்தில் 16 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 23 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அவர்­களில் 16 பேருக்கு சமூக அள­வில் தொற்று உறு­தி­யா­னது. வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் புதி­தாக எவ­ருக்­கும் தொற்று பதி­வா­க­வில்லை.

சமூ­கத்­தில் தொற்று உறு­திப்­ ப­டுத்­தப்­பட்­டோ­ரில் 13 பேர், முன்­ன­தாக தொற்று உறுதி செய்­யப்­பட்டோருடன் தொடர்­புள்ளவர்கள். எஞ்­சிய மூவ­ருக்கு முன்பு கிருமி தொற்­றி­யோருடன் தொடர்­பில்லை.

முன்­ன­தாக தொற்று உறுதி செய்­யப்­பட்டோருடன் தொடர்­பு­டை­ய­வர்­களில் 11 பேர் ஏற்கெனவே தனிமைப்­ப­டுத்­தப்­பட்­டு­ விட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த ஏழு பேருக்­குத் தொற்று உறு­தி­யா­னது. அவர்­களுக்கு வீட்­டிலிருக்கும் கட்டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

அவர்­களில் நால்­வர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள்.

சிங்­கப்­பூ­ரில் இது­வரை கிரு­மி­தொற்­றியவர்களின் மொத்த எண்­ணிக்கை 62,051 ஆகும்.

இவ்வேளையில் கிருமித் தொற்றால் 95 வயது சிங்கப்பூர் மாது உயிரிழந்தார். சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையக் கிருமித் தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர் அவர்.