பயண முன்பணம் தொடர்பான புகார்கள் 2020ல் கூடின

பயண முன்பணம் தொடர்பான புகார்கள் 2020ல் கூடின

1 mins read

சிங்கப்பூரர்கள் பலரும் சுற்றலா செல்லவும் விமா­னங்­களில் போகவும் ஹோட்­டல்­களில் தங்­கவும் முன்­ப­திவு செய்து வைப்­புத்­தொகை அல்­லது முன் பணம் செலுத்தி இருந்­தார்­கள்.

ஆனால் கொவிட்-19 காரண மாக அவற்­றில் பல­வும் ரத்து செய்­யப்­பட்­டன. அல்லது ஒத்­தி­வைக்­கப்­பட்டுள்ளன. இந்நிலையில் தாங்­கள் செலுத்­திய பணத்­தைத் திரும்­பப் பெற முடி­ய­வில்லை என்று கேஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் பயனீட்டா­ளர்­கள் சங்­கத்­தி­டம் புகார் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சங்­கத்­திற்­குச் சென்ற ஆண்டு வந்த கொவிட்-19 தொடர்­பான புகார்­களில் இத்­த­கைய புகார்­களே அதி­க­மாக இருந்­தன.

உடற்­ப­யிற்­சிக்­ கூ­டங்­கள், உட­லு­றுதி நிலை­யங்­கள், ஹோட்­டல்­கள், உண­வ­கங்­கள், மருத்­துவ நிறு­வ­னங்­கள், திரு­மண ஏற்­பா­டு தொடர்­பான நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு எதிராக தாக்­க­லான புகார்­களும் அதி­க­மிருந்­தன.

சென்ற ஆண்­டில் பெறப்­பட்ட 18,335 புகார்­களில் ஏழில் ஒன்று கொவிட்-19 தொடர்­பானதாக இருந்­த­தாக கேஸ் அமைப்பு அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

அவற்­றில் பாதிப் புகார்­கள், பயண, விமான நிறுவன தொழில்­துறை தொட­ர்பா­னவை.

முன் பணத்­தைப் பெற முடி­யா­மல் போனது ஒரு­பு­றம் இருக்க, பய­ணத்தை ஒத்­தி­வைத்­த­தால் தண்­டத்­தொகை செலுத்த வேண்டும், நிர்வா­கக் கட்­ட­ணத்­தக் கொடுக்­க­வேண்­டும் என்று சில­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­டது.

கேஸ் அமைப்­பபு புகார்­க­ளின் பேரில் செயல்­பட்­டது. பேச்­சு­வார்த்தை, சம­ர­சம் மூலம் விமான நிறு­வ­னங்­கள், பயண முக­வர்­கள், பயண இணைய வாசல்­கள் ஆகி­ய­ வற்­றி­டம் இருந்து $300,000க்கும் அதிக தொகை மீட்­கப்­பட்­டது.