போதைப் புழக்கம் ஒழிய 71 பள்ளிவாசல்களும் உதவும்

போதைப் புழக்கம் ஒழிய 71 பள்ளிவாசல்களும் உதவும்

2 mins read
68175a78-cf5b-4df2-bb5c-13ab09672ca5
பள்ளிவாசல்கள் தரும் ஆதரவைப் புலப்படுத்தும் பதாகையில் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் (இடது), உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஃபைசல் இப்ராஹிம் இருவரும் கையெழுத்திட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டில் இடம்­பெ­றும் போதைப்­பொ­ருள் புழக்க எதிர்ப்பு இயக்­கத்­திற்கு இங்­குள்ள 71 பள்­ளி­வா­சல்­களும் ஆத­ரவு அளிக்­கும்.

இந்­தப் போராட்­டத்­தில் மும்முரமாக பங்­காற்றும்படி சமூ­கத்திற்கு ஊக்க மூட்டும் நோக்­கத்­து­டன் கூடிய சிறப்­பான அற­நெறி போத­னைச் செயல்­திட்டமும் இதில் உத­வும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'டாடா இத்து ஹராம்' என்ற அந்­த போத­னைச் செயல் திட்­டத்தை உள்­துறை, சட்ட அமைச்­சர் கா சண்­மு­கம், உள்­துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் முகம்­மது ஃபைசல் இப்­ரா­ஹிம் இரு­வரும் நேற்று பிடோக்­கில் இருக்­கும் அல் அன்­சார் பள்­ளி­வா­ச­லில் தொடங்கி­வைத்­த­னர்.

முயிஸ் அமைப்­பின் தலைமை நிர்­வா­கி­யான ஈசா மசூது, துணை முஃப்தி உஸ்­தாத் டாக்­டர் முகம்­மது ஹான்­னன் யாசன் ஆகி­யோரும் அந்த நிகழ்ச்­சி­யில் கலந்து­கொண்­ட­னர்.

அனைத்­து­லக போதைப்­பொ­ருள் புழக்­கம் மற்­றும் கடத்­தல் ஒழிப்பு தினம் இன்று கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கிறது. இத­னை­யொட்டி இங்கு வரு­டாந்­திர போதைப் புழக்க எதிர்ப்பு இயக்­கம் தொடங்­கப்­பட்டு இருக்­கிறது.

இந்த இயக்­கத்தை மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வும் முயிஸ் அமைப்­பும் சேர்ந்து நடத்து­கின்­றன. இந்த முயற்சி 2017ல் தொடங்­கப்­பட்­டது.

அதற்குச் சென்ற ஆண்டு 15 பள்­ளி­வா­சல்­கள் ஆத­ரவு அளித்­தன. இந்த ஆண்டு 71 பள்­ளி­வாசல்­களும் உத­விக்­க­ரம் நீட்­டு­கின்­றன. போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான போரில் சமூ­கம் ஈடு­பாடு கொள்ள வேண்­டி­யது முக்­கி­ய­மானது என்­பதை வலி­யு­றுத்­தும் சிறப்பு அறநெறி போதனை வெள்­ளிக்­கிழமை தொழு­கை­யின்­போது இடம்­பெ­ற்றது.

அந்­தப் போத­னையை முஃப்தி அலு­வ­ல­கம் உரு­வாக்கி இருக்­கிறது.

போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான போராட்­டத்­தில் சமூ­கம் ஈடு­பட வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வத்தை நினை­வு­ப­டுத்­தும் பதாகைகள் பள்ளி­வா­சல்­களில் பொருத்­தப்­படும்.

இத­னி­டையே, நேற்­றைய நிகழ்ச்­சி­யின்­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்­சர் சண்­மு­கம், இந்தப் போராட்­டத்­திற்குப் பல ஆண்­டு­கா­ல­மாக ஆத­ரவு அளித்து வரும் முயிஸ் அமைப்­புக்கு நன்றி தெரி­வித்­தார்.

"சமூ­கத்­தில் போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான புரிந்­து­ணர்வை மேம்­ப­டுத்த முயிஸ் அமைப்­பும் பள்ளி­வா­சல்­களும் கொண்­டி­ருக்­கும் கடப்­பாடு, இன்­றைய செயல்­திட்டத் தொடக்­கத்­தின் மூலம் மீண்­டும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு உள்ளது.

"அணுக்­க­மா­கச் சேர்ந்து செயல்­படும் அணு­கு­மு­றை­யை­யும் இன்றைய நிகழ்ச்சி உறு­திப்­ப­டுத்தி இருக்­கிறது," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

போதைப்­பொ­ருள் புழக்­கத்தை ஒழிக்­கும் போராட்­டத்­தில் பள்­ளி­வா­சல்­கள் தரும் ஆத­ரவு முக்­கி­ய­மா­னது என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டிய அமைச்­சர், போதைப்­பொ­ருள் புழக்­கத்தை ஒழிக்­க­வும் குற்­ற­வா­ளி­கள் திருந்தி வாழ்­வ­தற்­கான ஆத­ரவை அதிகப்­ப­டுத்­த­வும் பள்­ளி­வா­சல்­கள் உள்­ளிட்ட அனைத்து சமூகப் பங்­கா­ளி­க­ளோ­டும் தொடர்ந்து செயல்­படப்போவதாகவும் குறிப்­பிட்­டார்.