இனவாதப் பிரச்சினைகளைக் கையாள முயற்சிகள்

இனவாதப் பிரச்சினைகளைக் கையாள முயற்சிகள்

1 mins read

சிங்­கப்­பூர் பள்­ளிக்­கூ­டங்­களில் இன­வா­தப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காணும் வகை­யில் பல நட­வடிக்­கை­களை கல்வி அமைச்­சும் தேசிய கல்­விக் கழ­க­மும் எடுத்து வரு­கின்­றன.

சரி­யான நன்­னெ­றி­க­ளைக் கொண்­ட­வர்­கள், மாண­வர்­களுடன் இன­வாத விவா­திப்­பு­களை மிக­வும் விவே­க­மான முறை­யில் நடத்­தக்­கூ­டி­ய­வர்­கள், இன நல்­லி­ணக்­கத்தை ஆத­ரிப்­போரை ஆசி­ரி­யர் பணிக்கு இந்த இரண்­டும் தேடி வரு­கின்­றன. வேலைக்கு புதி­தாக யாரா­வது சேரும்­போது அவர்­கள் இந்த அடிப்­ப­டை­க­ளைக் கொண்டு மதிப்­பி­டப்­ப­டு­கி­றார்­கள்.

பிறகு நான்கு மாதம் இடம்­பெ­றும் கட்­டாய ஒப்­பந்­த காலத்­தின்­போ­தும் இந்த மதிப்­பீடு தொடர்ந்து இடம்­பெ­றும்.

அதற்கு பிற­கு­தான் வகுப்­பு­களில் அவர்­கள் பாடம்­ போதிக்க முடி­யும் என்று அமைச்­சும் கழகமும் தெரி­வித்­தன.

ஆசி­ரி­யர் வேலைக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வோர் பன்­மய மாண­வர்­களை ஈடு­ப­டுத்­து­வ­தற்கு பொருத்­த­மா­ன­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் இன­வாத நம்­பிக்கை உடை­ய­வர்­கள் விலக்கி வைக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்­ப­தை­யும் உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் இடம்­பெ­றும் பல முயற்­சி­கள் பற்றி ஒரு கூட்­ட­றிக்­கை­யில் இந்த இரண்டு அமைப்­பு­களும் குறிப்­பிட்டுள்­ள­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்தது.