வீட்டிலேயே தங்கி இருக்கும்படி குடிமைத் தற்காப்புப் பயிலக வளாக மருத்துவ நிலைய மருத்துவர் ஒருவர் தெரிவித்து இருந்த ஆலோசனையை 22 வயது ஆடவர் ஒருவர் அலட்சியப்படுத்திவிட்டார்.
அவர் வீட்டைவிட்டு வெளியேறி தெம்பனிசில் இருக்கும் இக்கியா கடைக்குச் சென்றார். நகரில் இருக்கும் ஸ்கேட் பார்க் விளையாட்டு இடத்திற்கும் போனார். பிடோக்கில் ஒரு மாதையும் அவர் சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஃபாதுல்லா அப்துல் ரஹ்மான் என்ற அந்த ஆடவர் தொற்று விதிமுறைகள் 2020ன் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
அவருக்கு கொவிட்-19 தொற்று இருந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. என்றாலும் தொற்று கண்டறியப்பட்ட தேதி பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
ஃபாதுல்லா ஜூலை 22ஆம் தேதி குற்றங்களை ஒப்புக்கொள்ள இருப்பதாகத் தெரியவந்தது.
கேலாங் ஈஸ்ட் சென்ட்ரலில் இருக்கும் தன் வீட்டில் இருந்து ஃபாதுல்லா சென்ற ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை வெளியே போகக்கூடாது என்று அவருக்குக் கொடுக்கப்பட்ட முதலாவது மருத்துவச் சான்றிதழ் தெரிவித்தது. ஆனால் அவர் செப்டம்பர் 2ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
அடுத்த நாளும் அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். அந்த மருத்துவர் ஃபாதுல்லாவுக்கு வேறு ஒரு மருத்துவ சான்றிதழைக் கொடுத்தார். அது செப்டம்பர் 17 முதல் 19 வரை ஃபாதுல்லா வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றது. ஆனால் அவர் அதையும் மீறி யதாகத் தெரிவிக்கப்பட்டது.

