தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து என்றழைக்கப்படும் புசர்லா வெங்கட சிந்து தோல்வியடைந்துள்ளார்.
காலிறுதிச் சுற்றில் தைவானின் தை ட்சூ-யிங்கிடம் 18-21, 12-21 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியுற்றார். சென்ற ஒலிம்பிக்கில் இந்தப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் சிந்து. அது, ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா வென்ற முதல் வெள்ளிப் பதக்கம். அவர் உலகப் போட்டியின் நடப்பு வெற்றியாளரும்கூட. உலக பேட்மிண்டன் போட்டிகளில் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் சிந்து.
அவரை வென்றுள்ள தை ட்சூ-யிங், இறுதியாட்டத்தில் சீனாவின் சென் யு ஃபெயுடன் மோதுவார்.
வெண்கலப் பதக்க ஆட்டத்தில் சீனாவின் ஹ பிங்ஜியாவைச் சந்திப்பார் சிந்து.

