பாரிஸ்: உலகம் முழுவதும் மேலும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை கூடுதல் தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைக்கவேண்டும் எனும் உலக சுகாதார நிறுவனத்தின் வேண்டுகோளைப் பொருட்
படுத்தாமல், ஜெர்மனி, ஃபிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் சிலி ஆகிய நாடுகள் கூடுதல் தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தவுள்ளன.
உலக சுகாதார நிறுவனம் வலுவாக கூறியிருந்தாலும் கூடுதல் தடுப்பூசி குறித்த சில நாடுகளின் முடிவு, கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பில் பெரும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
டெல்டா வகை கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து தனது மக்களைப் பாதுகாக்கும் வகையில் பணக்கார நாடுகள் கூடுதல் தடுப்பூசி முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
ஃபிரான்சில் செப்டம்பர் மாதத்தில் இருந்து முதியோர், எளிதில் பாதிக்கப்படுவோருக்குக் கூடுதல் தடுப்பூசி போடப்படும் என்று அதன் அதிபர் இம்மானுவேல் மெக்ரூன் கூறியுள்ளார்.
அதுபோல் ஜெர்மனியும் தாதிமை இல்லவாசிகள், முதியோருக்கு செப்டம்பர் மாதம் முதல் தடுப்பூசி போட முடிவு செய்துள்ளது. இஸ்ரேலிலோ கூடுதல் தடுப்பூசி போடும் பணி சென்ற மாதமே தொடங்கிவிட்டது.
தடுப்பூசி விநியோகத்தை பணக்கார நாடுகள் அதிகம் பயன்படுத்திக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ், கூடுதல் தடுப்பூசி போடும் பணியைக் குறைந்தபட்சம் செப்டம்பர் மாத இறுதி வரையாவது நிறுத்து வைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
பணக்கார நாடுகள் ஒவ்வொரு 100 பேருக்கும் 50 தடுப்பூசி போடும் நிலையில், ஏழை நாடுகளில் ஒவ்வொரு 100 பேருக்கும் 1.5 தடுப்பூசி மட்டுமே போடப்படுவதாக அமைப்பு கணக்கிட்டுள்ளது.

