கொவிட்-19 பரிசோதனை கருவியைப் பெற தீவு முழுவதும் 100 இயந்திரங்கள் அமையும்

கொவிட்-19 பரிசோதனை கருவியைப் பெற தீவு முழுவதும் 100 இயந்திரங்கள் அமையும்

2 mins read
21b24685-52b3-4102-abe8-c1104ccd45f3
குடியிருப்புப் பேட்டைகளில் வைக்கப்படும் இயந்திரங்களில் எப்போது வேண்டு மானாலும் விரைவுப் பரிசோதனை கருவியைப் பெறலாம். படம்: சாவ் பாவ் -

சிங்­கப்­பூ­ரில் 56 இடங்­களில் இன்று முதல் 100 இயந்­தி­ரங்­களில் கொவிட்-19 சுய­பரி­சோ­தனை கருவி­க­ளை மக்கள் பெறலாம்.

அந்த இயந்­தி­ரங்­கள் பல்­வேறு குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளி­லும் அமைந்­தி­ருக்­கும். கொவிட்-19 கிருமித்­தொற்­றுக்கு ஆளாகி இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் எப்­போது வேண்டு­மா­னா­லும் அவற்­றில் இருந்து அந்தக் கரு­வி­யைப் பெற­லாம்.

எங்­கெங்கு அந்த இயந்­தி­ரங்கள் இருக்­கின்­றன என்­ப­தை­யும் அவற்றில் இருந்து அந்­தக் கரு­வியைப் பெறு­வ­தற்­கான விளக்­கத்தை­யும் https://www.gowhere.gov.sg/art என்ற இணை­யத் தளத்தில் பெற­மு­டி­யும்.

தொற்று ஆபத்து எச்­ச­ரிக்கை அல்­லது சுகா­தார ஆபத்து எச்­ச­ரிக்கை தக­வல்­க­ளைக் குறுஞ்­செய்தி மூலம் பெறு­வோ­ருக்கு இன்று முதல் அவர்­கள் பின்­பற்ற வேண்­டிய பரி­சோ­தனை நடை­முறை பற்­றிய விளக்­கங்­க­ளை­யும் சுகா­தார அமைச்சு அளிக்­கும்.

அவர்­கள் தங்­கள் அடை­யாள அட்­டையை அல்­லது வேலை அனு­மதி அட்­டை­யைப் பயன்­ப­டுத்தி இயந்­தி­ரங்­களில் இருந்து மூன்று கருவி­களைப் பெற­மு­டி­யும். பல்வேறு நிபந்தனைகளுக்கு ஏற்ப அவர்­கள் உடல்­நி­லையைப் பரி­சோ­தித்து வர­வேண்­டும்.

இத­னி­டையே, ஆகஸ்ட் 28 முதல் வீடு­க­ளுக்குச் சுய­ப­ரி­சோ­த­னைக் கரு­வி­கள் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. வரும் திங்­கட்­கி­ழமை நில­வ­ரப்­படி சுமார் 90% குடும்­பத்­தி­னர் அக்கரு­வி­யைப் பெற்று இருப்­பர் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று மெய்­நி­கர் பேட்­டி­யில் தெரி­வித்­தார்.

பள்­ளி­க­ளுக்­கும் நிறு­வ­னங்­களுக்­கும் அந்­தக் கரு­வி­கள் கொடுக்­கப்­ப­டு­வ­தை­யும் அவர் சுட்­டி­னார். ஒவ்­வொ­ரு­வ­ரும் சுய­பரி­சோ­த­னைக் கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி தங்­கள் உடல்­நிலையை சோதித்­துக்­கொள்ள வேண்­டும் என்றார் அமைச்­சர்.

இக்கரு­வி­யைப் பயன்­படுத்துவது கொவிட்-19 காலத்­தின் புதிய ஒரு பழக்­க­மாக ஆகும் என்று தான் நம்­பு­வ­தா­க­வும் அமைச்­சர் கூறினார்.