சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக சிறார் யாரும் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை. இங்கு 12க்கும் குறைந்த வயதுள்ள சிறார்களிடையே 367 பேருக்குக் கிருமி தொற்று ஏற்பட்டது.
இந்த விகிதம், மொத்தம் கிருமி தொற்றியோரின் எண்ணிக்கையில் 0.6% என்பதை நாடாளுமன்றத்தில் செவ்வாய் அன்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.
சிறார்களில் ஒருவருக்குக் கூட கடுமையான பாதிப்புகள் இல்லை என்பதை அவர் சுட்டினார்.
இதனிடையே, தடுப்பூசி செயல்திட்டத்தை நல்ல முறையில் நடைமுறைப்படுத்தி வரும் டென்மார்க்கில் தொற்று அதிகமாக இருப்பதைக் குறிப்பிட்டு அந்த நாட்டின் சூழ்நிலையை, சிங்கப்பூர் நினைத்துப் பார்க்கலாம் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
டென்மார்க்கில் ஒன்பது மற்றும் அதற்கும் குறைந்த வயதுள்ள சிறார்களிடையே தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 28,000 ஆக இருக்கிறது. அந்தச் சிறார்களில் இரண்டு பேர் மாண்டுவிட்டார்கள்.

