தாய்ப்பாலில் அணிகலன் தயாரிக்கும் தாரிக்கா

1 mins read
964c24ed-04a6-4045-b894-2ba26af7335f
தாய்ப் பாலில் இளையர் தாரிக்கா செய்துள்ள அணிகலன்.படம்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

தாய்ப்­பால், தொப்­புள்­கொடி, பல் போன்­ற­வற்­றைக் கலை­ந­யத்­து­டன் அணி­க­லன்­க­ளாக மாற்­றும் திறமை கொண்­ட­வர் தாரிக்கா சல்­மான். 23 வய­து­டைய இவர், தமிழ்­நாட்­டின் ராணிப்­பேட்டை மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர்.

குழந்தை தொடர்­பான நினை­வுப் பொருட்­களை உரு­வாக்­கும் இவர், பெற்­றோர்­ பலரது மனதை உறைய வைத்­துள்­ளார்.

ஆங்­கில இலக்­கி­யத் துறை­யில் பட்­டம் பெற்ற தாரிக்கா, தாய்ப்­பால் ஆலோ­ச­கர் படிப்­பை­யும் முடித்­துள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இருந்த தன் உற­வி­னர், முத்து மாதி­ரி­யான மோதி­ரம் ஒன்றை அணிந்­தி­ருந்­த­போது அது என்ன என்று தாரிக்கா கேட்க, அது தாய்ப்­பா­லில் செய்­தது என்­றார் அந்த உற­வி­னர்.

தாரிக்கா கரு­வுற்­ற­போது தாய்ப்­பா­லில் அணி­க­லன் செய்­யும் முறை­யைத் தேடிக் கண்­டு­பி­டித்து ஆராய்ந்­தார். பின், குழந்தை பிறந்­த­தும் தாய்ப்­பாலில் செய்­யப்­பட்ட நாண­யத்­தைத் தன் கழுத்­தில் அணிந்து கொண்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

விடுப்பு முடிந்து கல்­லூ­ரிக்­குத் திரும்­பிய தாரிக்­கா­வி­டம் அவ­ரின் நண்­பர்­கள் அந்த நாண­யத்­தைப் பற்றி கேட்­ட­னர். அவர்­களும் பின்னர் தாரிக்­கா­வின் சேவையை நாடத் தொடங்கி­னர்.

தாரிக்­கா­வின் வியா­பா­ரம் அப்­படித்­தான் தொடங்­கி­ய­தாக அவர் பகிர்ந்­து­கொண்­டார். தற்­போது இதன் செய்­மு­றைக்­கான காப்­புரிமை கேட்டு விண்­ணப்­பித்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

பெண்­கள் தாய்ப்­பால் புகட்­டு­வதை ஒரு கட்­டத்­தில் நிறுத்­தி­விட்­டா­லும் இது போன்ற தாய்ப்­பால் நகை­கள் அந்த நினை­வு­களை என்­றுமே சுமப்­ப­தாக தாரிக்கா குறிப்­பிட்­டார்.

தனக்­குக் கிடைக்­கும் வரு­மானத்­தில் ஒரு பகு­தியை, அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளுக்கு வருகை தரும் ஏழைத் தாய்­மார்­களுக்கு உதவி செய்­வ­தெற்­கென ஒதுக்­கு­வ­தா­க­வும் தாரிக்கா பகிர்ந்து­கொண்­டார்.