சமூக ஊடகச் சவால்கள் பங்கேற்போரின் நோக்கம் விழிப்புணர்வா? விபரீதமா?

சமூக ஊடகச் சவால்கள் பங்கேற்போரின் நோக்கம் விழிப்புணர்வா? விபரீதமா?

2 mins read

அனை­வ­ரது கவ­னத்­தை­யும் தங்­கள் வசம் ஈர்க்க வேண்­டும் என்­பது சில­ரது ஆசை. இதைச் சமூக ஊட­கங்­கள் தங்­க­ளுக்­குச் சாத­க­மாக்­கிக்­கொள்­கின்­றன. சமூக ஊட­கச் சவால்­களில் ஒரு­வ­ரைப் பங்­கேற்­கச் செய்து தங்­க­ளின் புகழை அதி­கப்­படுத்­திக்­கொள்­கின்­றன.

மக்­க­ளைச் சென்­ற­டைந்து விழிப்­பு­ணர்வு ஏற்­படுத்­து­வ­தா­கக் கூறும் கூட்­டம் ஒருபுறம், ஆபத்­தான சவா­லில் பங்­கேற்று விப­ரீ­த­மாக்­கும் கூட்­டம் மறுபுறம் இருக்­கவே செய்­கின்­றன.

இவ்­வாறு வேடிக்­கைக்­காக ஒரு சமூக ஊட­கச் சவா­லில் பங்­கேற்று, அது பய­மு­றுத்­தும் ஒன்­றாக மாறு­வ­தும் உண்டு. 'கொரோனா கிருமி சவால்' என்ற ஒன்று கடந்த ஆண்டு தொடங்­கப்­பட்­டது. கிரு­மித்­தொற்­றின் வீரி­யத்தை அதி­கம் அறி­யா­தோர் அதில் பங்­கேற்­ற­னர்.

விமா­னத்­தின் கழி­வுத் தொட்டி இருக்­கையை ஒரு பெண் தன் நாவி­னால் நக்­கி­ய­து­டன் அதைத் தன் டுவிட்­டர் கணக்­கி­லும் பதி­விட்­டார்.

உடனே, பல­ரும் பல இடங்­களில் அதே செய­லைச் செய்­யத் துணிந்­த­னர். ரயி­லில் உள்ள கைப்­பிடி, பொது இடத்­தில் உள்ள நாற்­காலி என எதை­யும் விட்­டு­வைக்­க­வில்லை.

இச்­ச­வா­லில் பங்­கேற்ற ஒரு­வர், பின்­னா­ளில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­க­வும் பட்­டார். தங்களுக்குக் கிருமித்தொற்று ஏற்படாது என்று கூறிச் சவாலில் பங்கேற்றவர்களது துணிச்சல் பாராட்டுதலுக்குரியதன்று.

கடந்த ஆண்டு டிக்­டாக் தளத்­தில் தொடங்­கப்­பட்ட 'ஸ்கல் பிரேக்­கர்' சவா­லில் 13 வயது சிறு­வ­னுக்­குக் கடு­மை­யான காயங்­கள் ஏற்­பட்­டன. மூன்று பேர் குதிக்­கப் போவ­தா­கக் கூறிய பின்­னர், அதில் ஒரு­வர் குதிக்­கும்­போது மற்ற இரு­வ­ரும் குதிப்­ப­வ­ரது கால்­களை வாரி­வி­டு­வர். இத­னால், குதித்­த­வர் கீழே விழுந்­து­வி­டு­வார். இச்­ச­வால் அமெ­ரிக்­கா­வி­லும் பிரிட்­ட­னி­லும் பரவல் ஆனதுடன் என்ன நடக்­கிறது என்று தெரி­யாமல் பங்­கேற்ற பல­ருக்­கும் பலத்த காயங்­கள் ஏற்­பட்­டன. இத்­த­கைய காணொ­ளி­க­ளைப் பின்­னர் டிக்­டாக் அதன் தளத்­தி­லி­ருந்து அகற்­றி­யும் விட்­டது.

பிள்ளைகளின் இணைய நடவடிக்கைகளைப் பெற்றோர் கண்காணிப்பது முக்கியமாகிறது. வருமுன் காப்பதில் தவறேதும் இல்லையே!