தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நதியா: சென்னை என் மனதுக்கு நெருக்கமான இடம்

1 mins read
7fc41f21-5d6a-4ee1-b4d0-1fdfc5ba4c5c
-

தீபா­வளி என்­றால் தனி உற்­சா­கம் வந்­து­வி­டும் என்­கி­றார் நதியா.

மீண்­டும் நடிக்­கத் துவங்­கிய பிறகு தெலுங்­கில் அதிக வாய்ப்­பு­கள் தேடி வரு­வது மகிழ்ச்சி தரு­வ­தா­க­வும் இப்­போ­தும்­கூட சிறு­மி­கள் முதல் வய­தான பெண்­கள் வரை தன் நடிப்பை பாராட்­டு­வது வியப்­ப­ளிப்­ப­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் கூறி­யுள்­ளார்.

"முன்­பெல்­லாம் சென்­னை­யில் உள்ள எனது தோழி திவ்­யா­வு­டன் இணைந்­து­தான் தீபா­வ­ளிக்கு பட்­டா­சு­கள் வெடிப்­போம். தெரு­வில் நடந்து செல்­ப­வர்­க­ளுக்­குப் பின்­னால் வெடி­யைக் கொளுத்­திப்­போட்டு கலாட்டா செய்­வோம்.

"இப்­போ­தும் தீபா­வளி கொண்­டா­டு­கி­றோம் என்­றா­லும், சாதா­ரண வெடி­கள் மட்­டுமே பயன்­ப­டுத்­து­கி­றோம்.

"தமிழை விட தெலுங்­கில்­தான் அதிக வாய்ப்­பு­களும் கதா­பாத்­தி­ரங்­களும் அமை­கின்­றன. அதே சம­யம் சென்­னை­தான் என் மன­துக்கு நெருக்­க­மான இடம்.

"முன்­னணி நடி­கை­யாக இருந்­த­போதே திரு­ம­ணம் செய்­து­கொண்டு வெளி­நாடு சென்­று­விட்­டேன். அப்­போது தனி­மையை உணர்ந்­த­தால் கல்­லூ­ரி­யில் சேர்ந்து படித்­தேன்.

"அதன் பிறகு இரு குழந்­தை­க­ளுக்­குத் தாயாக அவர்­களை வளர்த்­தெ­டுக்­கும் பொறுப்பை நிறை­வேற்­றி­யுள்­ளேன். இப்­போது மீண்­டும் நேரம் கிடைப்­ப­தால் சினி­மா­வில் கவ­னம் செலுத்­து­கி­றேன்.

"எனக்கென தனி அடையாளம், அங்கீகாரம் கொடுத்தது தமிழ் சினிமாதான். அதை வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன்," என்­கி­றார் நதியா.