முதல் முறையாக நேரடி இந்திப் படத்தில் நடிக்க உள்ளார் சமந்தா. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவாகரத்து தொடர்பாக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, தற்போது அதிலிருந்து வெளிவந்து, மீண்டும் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்திப் படம் ஒன்றில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இது நாயகியை மையப்படுத்தும் கதையைக் கொண்டு உருவாகிறதாம்.
ஏற்கெனவே 'ஃபேமிலிமேன்-2' இணையத் தொடர் மூலம் இந்தி ரசிகர்களுக்கு அறிமுகமாகி உள்ளார் சமந்தா.
இந்நிலையில், நேரடி இந்திப் படத்தில் அறிமுகமாவது அவருக்கு உற்சாகம் அளித்துள்ளது.


