சிவா: நிச்சயம் ஒரு நாள் இயக்குநர் ஆவேன்

சிவா: நிச்சயம் ஒரு நாள் இயக்குநர் ஆவேன்

2 mins read
5f6d503a-3a94-4ce3-abed-8a592adaf0e5
, :    -

மறு­ப­திப்பு படங்­களில் நடிப்­பதை தாம் அறவே விரும்­பு­வ­தில்லை என்­கி­றார் சிவ­கார்த்­தி­கே­யன்.

ஐந்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு படங்­களை இயக்க வேண்­டும் எனும் கனவு தமக்கு இருப்­ப­தா­க­வும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தொடர்ந்து வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளங்­களில் நடிக்க விரும்­பு­கி­றேன். அதே சம­யம் மறு­ப­திப்பு படங்­களில் எனக்கு ஆர்­வம் இல்லை. கார­ணம், முதல் பதிப்­பில் நடித்­துள்ள கதா­நா­ய­கர்­க­ளின் திற­மைக்கு நான் ஈடு­கொ­டுக்க வேண்­டி­யி­ருக்­கும். அது சாத்­தி­ய­மல்ல.

"உதா­ர­ண­மாக, அல்லு அர்­ஜுன் நடிப்­பில் வெளி­யான 'வைகுந்­த­பு­ர­முலு' தெலுங்­குப் படத்­தின் மறு­ப­திப்­பில் நடிக்க கேட்­ட­னர். அவ­ரைப் போல் நட­னம் ஆட வாய்ப்பே இல்லை. அத­னால் மறுத்­து­விட்­டேன்.

"இதற்கு முன்பு ஒரு கன்­ன­டப் படத்­தின் பாடல் காட்­சி­யில் மட்­டும் தோன்றி இருக்­கி­றேன். தமிழ் ரசி­கர்­கள் எனக்­கென ஓர் இடத்தை அளித்­துள்­ள­னர். அதன் மூலம் நான் நடிக்­கும் படங்­களை இரண்டு அல்­லது மூன்று மொழி­களில் வெளி­யிட முடி­யும். அதே சம­யம் நேர­டி­யாக பிற மொழிப் படங்­களில் நடிப்­பது ஒரு சவால்­தான்.

"அவ்­வாறு நான் நடிக்­கத் தொடங்­கும்­போது சினிமா குறித்த எனது பார்­வை­யும் அணுகு­மு­றை­யும் நிச்­ச­யம் மாறும். அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்­குள் இயக்­கு­ந­ராக உரு­வெ­டுப்­ப­தற்­குத் தேவை­யான தகு­தி­களை வளர்த்­துக்­கொள்­வேன்.

"இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்ற கடு­மை­யாக உழைக்க வேண்­டும் என்­பது தெரி­யும். இன்­றைய சூழ்­நி­லை­யில் நான் அதற்குத் தயா­ரா­க­வில்லை. எனி­னும், இயக்­கு­ந­ராக வேண்­டும் என்ற கனவு எத்­தனை ஆண்­டு­கள் கடந்து போனா­லும் மன­தில் பதிந்­தி­ருக்­கும்," என்­கி­றார் சிவ­கார்த்­தி­கே­யன்.

பக்­கத்து வீட்­டுப் பையன் என்று தம்­மைக் குறிப்­பி­டு­வதை ரசித்து வர­வேற்­ப­தாக குறிப்­பி­டு­ப­வர், அது­போன்ற கதா­பாத்­தி­ரங்­கள்­தான் தமக்கு ஒத்­து­வ­ரும் என்­கி­றார்.

ரசி­கர்­கள் தங்­கள் குடும்­பத்­தில் ஒரு­வ­ராக தம்மை ஏற்­றுக்கொண்­டி­ருப்­பது நெகிழ வைப்­ப­தா­க­வும் சொல்­கி­றார்.

"பக்­கத்து வீட்­டுப் பையன் என்ற பெயர் என்­னைக் கைவிட்­டுப் போகக்­கூ­டாது என விரும்­பு­கி­றேன். அதற்­காக எத்­தனை காலத்­துக்­குத்­தான் ஒரே மாதி­ரி­யாக நடிக்க முடி­யும் எனும் கேள்வி எழக்­கூ­டும்.

"என்­னைப் பொறுத்­த­வரை இப்­போது வரை அதற்­கான அவ­சி­யம் எழ­வில்லை. நான் வெற்றி பெற்­றால் மகி­ழும் ரசி­கர்­கள், என் படங்­கள் தோல்வி அடைந்­தால் வருத்­தப்­ப­டு­கி­றார்­கள்.

இது ஒன்றே நான் அவர்­க­ளு­டைய குடும்­பத்­தில் இருக்­கி­றேன் என்­ப­தற்­கான ஆதா­ரம். இதை இழக்க விரும்­ப­வில்லை. மற்ற அனைத்­தை­யும் விட ரசி­கர்­க­ளின் இந்த பாச­மும் அக்­க­றை­யும் மிகப் பெரி­யது," என்­கி­றார் சிவ­கார்த்­தி­கே­யன்.

கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­யால் திரை­உ­ல­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது வருத்­தம் அளிப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், தொற்று கட்­டுக்­குள் வந்­த­தும் திரை­யு­ல­கம் எழுச்சி பெறும் என்­றும் அப்போது இளை­யர்க ளுக்கு பரவலாக வாய்ப்பு கிடைக்­கும் என்­றும் சொல்­கி­றார்.