லண்டன்: நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றொரு பிரிமியர் லீக் போட்டியில் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அலை அலையாக தாக்குதல் மேற்கொண்ட பிரிமியர் லீக் புது வரவான பிரண்ட்ஃபர்ட் அணியை சமாளித்து லீக் தரவரிசையில் தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது தாமஸ் டுக்கலின் செல்சி அணி. பிரமியர் லீக் தொடக்க ஆட்டங்களில் விளையாட வாய்ப்பின்றித் தவித்த செல்சியின் பென் சில்வெல், ஆட்டத்தின் 45ஆம் நிமிடத்தில் பிரண்ட்ஃபர்ட் அணியின் தற்காப்பு வீரர்கள் செய்த தவற்றால் கோல் போட்டார். பின்னர், இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரண்ட்ஃபர்ட் மேற்கொண்ட தொடர் தாக்குதல்களை செல்சி கோல்காப்பாளர் மெண்டி அற்புதமாகத் தடுத்து தமது அணியைக் காப்பாற்றினார். ஆட்டம் பற்றிக் கூறிய தாமஸ் டுக்கல், "முதல் 70 நிமிடங்களில் குழு மிகச் சிறப்பாக விளையாடியது, கடைசி 20 நிமிடங்கள் அதிர்ஷ்டம் காப்பாற்றியது," என்று கனகச்சிதமாக ஆட்டத்தை விவரித்தார்.
இறுதிக்கட்ட நெருக்கடி; சமாளித்த செல்சி
1 mins read

