தேக்கா சந்தையில் இப்போது லெஹெங்கா, சேலையைத் தவிர்த்து ஷராரா என்னும் ஆடை வகையும் பரவலாக விற்பனை ஆகின்றன. இந்த ஆடை பார்ப்பதற்கு பாவாடை(skirt) போல் இருந்தாலும் கால்சட்டை(pants) வகையை சேரும். ஷராரா சூட்டில், குர்தா, பேன்ட் மற்றும் துப்பட்டா ஆகியவை அடங்கும். முகலாய காலத்தில் அறிமுகமான ஷராரா, இந்தியாவில் குறிப்பாக லக்னோ பகுதியில் பரவலாக அணியப்படுகிறது.
இந்த வகை உடையை பொதுவாக உலகெங்கிலும் உள்ள பாகிஸ்தான், முஸ்லிம் பெண்கள் அணிகின்றனர். இந்தியாவின் பாம்பே, டெல்லி பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் ஷராரா, சிங்கப்பூரில் சென்ற தீபாவளி அன்றே விற்பனையாகத் தொடங்கியது. கடந்த ஆண்டு விற்பனை அதிகம் இல்லையென்றாலும் இவ்வாண்டு இந்த வகை ஆடை பலரால் விரும்பி வாங்கப்படுகிறது என்று கூறினார் தேக்கா சந்தையில் இருக்கும் ரோஸ் பேஷன் ஆடை விற்பனையாளர் திருமதி ரதி அழகிரி, 40.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் அணியக்கூடிய விதத்தில் பல்வகை ஷராராக்களை விற்கிறது தேக்கா சந்தை.
வியாபாரம் இந்த ஆண்டும் சற்று மந்தமாக இருந்தாலும் இப்போது கடந்த சில ஆண்டுகளாகக் கூட்டம் அதிகமாக வருவது கடைக்காரர்களுக்கு உற்சாகம் தந்துள்ளது.

