ஆடைகளில் தீபாவளி மயில் அலங்காரம்

ஆடைகளில் தீபாவளி மயில் அலங்காரம்

1 mins read
4f00c023-8876-49dc-ae95-683c5a753e36
மயில் ஓவியத்துடன் சேலை. படம்: திமத்தி டேவிட் / தமிழ் முரசு -

ஒவ்­வோர் ஆண்­டும் தீபா­வளி ஒளி­யூட்டு அலங்­கா­ரத்­தில் மயில் ஒரு முக்­கிய அங்­கத்தை வகிக்­கும். இந்த மயில் இப்­பொது ஆண்­கள் அணி­யும் வேட்டிகளுக்கும் அழகு சேர்க்­கிறது.

ஜுவெல் பேல­சில் எளிய வெள்ளை வேட்­டி­கள்­கூட அழ­கிய வடி­வ­மைப்­பு­க­ளு­டன் விற்­ப­னை­யாகின்­றன.

சிங்­கப்­பூ­ரில் ஒரு குடும்­பத்­தில் அம்மா அப்பா பிள்­ளை­கள் அனை­வர்க்­கும் ஒரே மாதி­ரி­யான டிசைன்­களில் ஆடை­களைத் தெரிவு செய்து கொடுக்­கின்­ற­னர் கடைக்­கா­ரர்­கள். ஒரு சேலையை தேர்வு செய்து கொடுத்­தால் அதற்குப் பொருத்­த­மான ஜிப்பாவை அவர்­களே எடுத்துக் கொடுப்­பர்.

பொது­வாக சிங்­கப்­பூ­ரில் மலாய்க்­கா­ரர்­கள் பண்­டிகை காலத்­தின்­போ­து ­பொருந்தும் ஆடை­களை அதி­கம் உடுத்திப் பார்த்­தி­ருப்­போம். இப்­போது இந்த வழக்­கம் இந்­தியர்­க­ளி­ட­மும் பிர­ப­ல­மாகி வரு­வ­தாகக் கூறி­னார் ஜுவெல் பேலஸ் விற்பனை­யா­ளர்­கள்.