தாக்குதல் வீரர் இங்கெட்டியா: அர்டெட்டா புகழாரம்

தாக்குதல் வீரர் இங்கெட்டியா: அர்டெட்டா புகழாரம்

2 mins read
512874d3-bf98-48ae-9997-7e8888b0364f
நேற்று அதிகாலை செல்சி, செளத்ஹேம்டன் குழுக்களிடையே நடைபெற்ற ஆட்டத்தில் இரு குழுக்களும் 1-1 என சமநிலையில் இருந்தபோது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிய சௌத் ஹேம்டன் குழுவின் இடைவிடா தாக்குதலிலிருந்து செல்சி அணியைக் காப்பாற்றிய அதன் கோல்காப்பாளர் கெப்பா. படம்: ஏஎஃப்பி -

லண்­டன்: இங்­கி­லாந்து காற்­பந்து கார­பாவ் கிண்­ணப் போட்டி ஒன்­றில் லீட்ஸ் யுனை­டெட் குழு­வுக்கு எதி­ராக நேற்று அதி­காலை ஆர்­ச­னல் கள­மி­றங்­கி­யது.

அதில் ஆர்­ச­னல் தாக்­கு­தல் வீரர் எடி இங்­கெட்­டியா என்­ப­வர் போட்ட இரண்­டா­வது கோல் ஆர்­ச­னல் குழு­வின் 2-0 என்ற கோல் எண்­ணிக்­கை­யி­லான வெற்­றியை உறுதி செய்­தது. ஆர்­ச­ன­லின் முதல் கோலை கேலம் சேம்­பர்ஸ் என்­ப­வர் ஆட்­டத்­தின் 55ஆவது நிமி­டத்­தில் போட்­டார். அதன் இரண்­டா­வது கோலை 69ஆவது நிமி­டத்­தில் போட்ட எடி இங்­கெட்­டி­யாவை அந்­தக் குழு­வின் நிர்­வாகி மிக்­கெல் அர்­டெட்டா வான­ளா­வப் புகழ்ந்­தார்.

லீட்ஸ் குழு கோல்­காப்­பா­ளர் செய­லி­ழந்து கிடந்த நொடிப் பொழு­தில் பந்தை வலைக்­குள் புகுத்தி ஆர்­ச­ன­லின் இரண்­டா­வது கோலை, லீட்ஸ் குழு­வி­லி­ருந்து இர­வல் வீர­ராக ஆர்­ச­ன­லுக்கு வந்த, இங்­கெட்­டியா போட்­டார்.

"அவர் (இங்­கெட்­டியா) மிகச் சிறந்த விளை­யாட்­டா­ள­ராக வரு­வார் என்­பதை நான் முழு­மை­யாக நம்­பு­கி­றேன்.

"அவர் ஆர்­ச­ன­லில் தொடர்ந்து இருப்­பார் என்­றும் நான் நம்­பிக்கை கொண்­டுள்­ளேன் என பல புதிய வீரர்­க­ளான எமில் ஸ்மித், ரோவ், புக்­காயோ சாக்கா போன்ற இளம் வீரர்­களை உரு­வாக்­கிய அர்ெடட்டா கூறி­னர்.

"அவர் இங்­கி­ருப்­பது எனக்கு மகிழ்ச்­சி­யைத் தரு­கிறது. அவர் மீது நான் பெரு மதிப்பு வைத்­துள்­ளேன். அவர் இந்­தக் குழு­வி­லேயே தொட­ரந்து இருக்க வேண்­டும் என விரும்­பு­கி­றேன்," என விளக்­கி­னார்.நேற்­றைய ஆட்­டம் விறு­வி­றுப்­பா­கத் தொடங்­கி­ய­தாக காற்­பந்து விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

இதில் லீட்ஸ் குழுவே ஆரம்­பத்­தில் முனைப்­பு­டன் விளை­யா­டி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஆனால், ஆர்­ச­னல் தனது முதல் கோலைப் போட்­ட­வு­டன் ஆட்­டத்­தின் போக்கு மாறி­ய­தாக பிபிசி செய்­தித் தக­வல் தெரி­விக்­கிறது. ஆர்­ச­ன­லின் முதல் ேகால் போன­வு­டன் லீட்ஸ் குழு ஆட்­டத்தை தனது கட்­டுப்­பாட்­டில் எடுத்­துக்கொள்­ளும் முயற்­சி­யில் லீட்ஸ் குழு தனது கட்­டுக்­கோப்பை இழந்ததாகக் கூறப்­ப­டு­கிறது.

நேற்­றி­ரவு நடை­பெற்ற மற்­றோர் ஆட்­டத்­தில் செளத்­ஹேம்­டன் அணியை வெற்ற கொள்ள பிரி­மி­யர் லீக் தர­வ­ரி­சை­யில் முத­லி­டத்­தில் இருக்­கும் செல்சி அணி பெனால்டி வாய்ப்­பு­களை நம்­பிக் காத்­துக் கிடக்க வேண்­டி­யி­ருந்­தது.

முதல் பாதி ஆட்­டத்­தில் செல்சி அணி ஒரு கோல் போட செளத் ஹேம்­டன் குழு­வின் செ ஆடம்ஸ் சம­நிலை செய்­தார். பின்­னர் நடந்த பெனால்டி வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக் கொண்ட செல்சி இறு­தி­யில் 4-3 என பெனால்டி கோல்­களில் வெற்றி வாகை சூடி­யது.