மரணம் பற்றியும் அதற்கு அப்பால் உள்ளவற்றைப் பற்றியும் விளக்கும் காட்சியகம் ஹாவ் பார் வில்லா வளாகத்தில் இன்று திறக்கப்பட்டுள்ளது. நரகத்தின் காட்சியகம் என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உலகின் வெவ்வேறு சமயங்களும் பண்பாடுகளும் வெவ்வேறு காலகட்டங்களில் மரணத்தையும் மறுமை எனப்படும் உயிர் பிரிந்த பின் உள்ள நிலையையும் எவ்வாறு பார்க்கின்றன என்பதை இந்தக் காட்சியகம் விளக்கும்.
இத்தகைய கருப்பொருளைக் கொண்ட முதல் அரும்பொருளகம் இது என்று காட்சியகம் அதன் இணையப் பக்கத்தில் கூறியது.
இக்காட்சியகம் 3,800 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்லூடகக் கண்காட்சியில் சிறப்புக் காணொளிகள் இடம்பெறுகின்றன. இவை, உயிர்நீத்தவர் களுக்கான சடங்குகளையும் நிகழ்வுகளையும் இன்னும் பல அம்சங் களையும் விளக்குகின்றன.
மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சிப் பொருள்கள், மரணச் சடங்குகளில் உலகின் முக்கிய சமயங்களிடையே உள்ள ஒற்றுமைகளை ஒப்பிட்டுப் பார்க்க உதவும்.
அத்துடன், நரகத்தின் பத்து வாசல்களைக் குறிக்க ஹாவ் பார் வில்லாவில் வைக்கப்பட்டுள்ள சிலைகளைப் புரிந்துகொள்ளவும் புதிய காட்சியகம் உதவும்.
பாசிர் பாஞ்சாங் சாலையில் உள்ள ஹாவ் பார் வில்லா, 84 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

