தீபாவளி என்றால் முதலில் நினைவுக்கு வருவது சுவையான விருந்தும் பலகாரங்களும்தான். ஆனால், இனிப்பையும் எண்ணெய்யையும் குறைத்து உடல்நலனைப் பேணுவதுதான் இந்த நேரத்தில் மிகப் பெரிய சவால். அதற்கு சில மாற்று வழிகளை நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.
"நீங்கள் தயாரிக்கும் விருந்து குறைந்தது 80% சுகாதாரமானது என்பதை உறுதி செய்யுங்கள்," என்று இந்தியாவைச் சேர்ந்த உடல்நல, நீரிழிவு நோய் ஆலோசகர் திலகா மணிகண்டன் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளிடம் கூறினார். சில மாற்றங்களைச் செய்து இதர 20 விழுக்காட்டையும் உடல் நலனுக்கு உகந்ததாகச் சமைக்கலாம் என்றார் அவர்.
முதலில், நிறைய எண்ணெய் யில் பொரிப்பதற்குப் பதில் அவிக்கும், பேக் செய்யும், குறைந்த எண்ணெயைப் பயன்படுத்தி பொரிக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்று திலகா குறிப்பிட்டார்.
அல்லது 'ஏர்-ஃபிரையர்' கருவியைப் பயன்படுத்தலாம்.
கிழங்கு வகைகளை விடுத்து, ஸுக்கினி போன்ற காய்கறிகளைப் பயன்படுத்தலாம் என்று ஆலோசகர் ஹீனா குஜ்ரால் கூறினார்.
மேலும், வெள்ளைச் சீனியை விடுத்து பலகாரங்களில் கருப்பட்டி, வெல்லம் ஆகியவற்றைக் குறைவாகப் பயன்படுத்தலாம்.
முறுக்கு, சீடை போன்ற பலகாரங்களுக்குச் சிறுதானியங் களையும் செக்கு எண்ணெய் வகைகளையும் பயன்படுத்தலாம் என்றார் திலகா. இவற்றைத் தவிர, முடிந்தவரை பலகாரத் தட்டுகளில் பல வண்ணப் பழங்களைச் சேர்த்துக்கொள்வது நல்லது என்றும் ஆலோசகர்கள் கூறினர்.
இறுதியில் தீபாவளிப் பரபரப்பில் தண்ணீரை மறந்துவிட வேண்டாம். உடலில் சேரும் சர்க்கரை, கொழுப்பை வெளியேற்ற அது முக்கியம் என்றனர் ஆலோசகர்கள்.

