கவிமாலை நிகழ்ச்சியில் கவிஞர் கலாப்ரியா

கவிமாலை நிகழ்ச்சியில் கவிஞர் கலாப்ரியா

1 mins read

கவி­மாலை அமைப்பு நாளை நடத்­தும் 257வது சந்­திப்­பில் புகழ்­பெற்ற தமிழ் நவீ­னக் கவி­ஞர் கலாப்­ரியா கலந்­து­கொள்­ள­வி­ருக்­கி­றார்.

நாளை 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஸூம் செயலி வழி­யாக நிகழ்ச்சி நடை­பெ­றும்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள கவி­ஞர்­கள், கவிதை ஆர்­வ­லர்­க­ளு­டன் கவி­மாலை ஒவ்­வொரு மாத­மும் கடைசி சனிக்கிழமை இந்த மாதாந்­தி­ரச் சந்­திப்பை நடத்தி வரு­கிறது.

"அனிச்­சம், தண்­ணீர் சிற­கு­கள், பேனா­வுக்­குள் அலை­யா­டும் கவி­தை­கள்" உள்­ளிட்ட கவிதை நூல்­களை எழு­தி­யுள்ள கவிஞர் கலாப்ரியா, நிகழ்­வில் சிறப்­பு­ரை­யாற்­று­வார். அவ­ரு­டனான கலந்­து­ரை­யா­டல் அங்­க­மும் உண்டு.

நிகழ்ச்­சி­யில் கவி­ஞர் சர்­வான் ஒருங்­கி­ணைப்பு செய்ய, தங்­க­ளுக்­குப் பிடித்த கலாப்­ரியா கவி­தை­களின் வரிகளை மாண­வர்­கள் வாசிப்­பார்­கள்.

"இயல்­பின்­றித் தவிக்­கும் வீடு" எனும் தலைப்­பி­லான இம்­மா­தக் கவி­தைப் போட்­டிக் கவி­தை­கள் விமர்­ச­ன­மும் இடம்­பெ­ற­வி­ருக்­கிறது. இணை­யம் வழி நடை­பெ­ற­வி­ருக்­கும் நிகழ்ச்­சிக்கு அனு­மதி இல­வ­சம்.

ஸூம் சந்­திப்பு எண்: 238 635 9660 (கடவு எண் இல்லை)