மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது சிங்கப்பூர் கிளை, கடந்த 20ஆம் தேதி. 320, சிராங்கூன் சாலையில் உள்ள செண்ட்ரியம் ஸ்குவேரில் திறக்கப்பட்டுள்ளது. கடைத் திறப்பை முன்னிட்டு அங்கு சிறப்புப் பரிசுகள் வாடிக்கையாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, $1,000 மதிப்புள்ள தங்க, ரத்தின நகைகளை வாங்கு வோருக்கு அரை கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
அதே போல், $1,500 மதிப்புள்ள தங்க, ரத்தின நகைகளை வாங்குவோருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.
இந்தச் சிறப்புச் சலுகை மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் எல்லா கிளைகளிலும் வரும் நவம்பர் 4ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.
புதிய கிளையை மலபார் குழுமத்தின் தலைவர் திரு எம்பி அஹமது கடந்த 20ஆம் தேதி புதன்கிழமை, இணையம் வழியாகத் திறந்து வைத்தார்.
அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களையும் தங்கள் நகை களுக்காக உயர்ந்து வரும் தேவையையும் கருத்தில் கொண்டு இங்கு மூன்றாவது கிளையைத் திறந்ததாக மலபார் கோல்ட் நிறுவனம் கூறியது.
வியக்க வைக்கும் அழகையும் என்றும் பொருந்தக்கூடிய வடிவமைப்புகளையும் கொண்ட பாரம்பரிய, நவீன நகைகள் புதிய செண்ட்ரியம் ஸ்குவேர் கிளையில் வைக்கப்பட்டுள்ளன.
நிறுவனம் முத்திரை பதித்துள்ள திருமண நகைகளும் 20 நாடுகளைச் சேர்ந்த புதுவித தங்க, வைர, ரத்தின நகைகளும் மலபார் கோல்டின் புதிய கிளையில் கிடைக்கும்.
பத்து நாடுகளில் 260க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை வைத்துள்ள மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ், இவ்வாண்டு இறுதிக்குள் மலேசியாவில் இரண்டு புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிடுகிறது.

