துபாய்: இருபது ஓவர் உலகக் கிண்ண ஆட்டத்தில் இன்றிரவு இந்தியாவும் நியூசிலாந்தும் மோதும் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானிடம் தோல்வியுற்ற இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இப்போட்டி கிட்டத்தட்ட வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை அந்த அணியால் உறுதிசெய்ய முடியும்.
அனைத்துலகப் போட்டிகளில் நியூசிலாந்திடம் தொடர்ந்து தோல்வியையே இந்தியா சந்தித்து வந்துள்ளதால் இன்றும் அது தொடருமோ என்ற கவலை இந்திய ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
அப்படி நிகழ்ந்தால் இந்தியாவின் உலகக் கிண்ண கனவு தகரும் நிலை ஏற்படலாம். இருபது ஓவர் உலகக் கிண்ணத்தை 2007ஆம் ஆண்டு இந்தியா வென்ற போது கூட லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் அது தோல்வியைத் தழுவி இருந்தது.
2016ஆம் ஆண்டின் இருபது ஓவர் உலகக் கிண்ண ஆட்டத்திலும் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தியது. தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண ஆட்டத்திலும் அரைஇறுதியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து வென்றது. இந்தத் தொடர் தோல்விக்கு இன்று இந்தியா முற்றுப்புள்ளி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. அனைத்துலகப் போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்லும் அதிசயம் நிகழ்ந்திருக்கும் வேளையில் நியூசிலாந்தை இந்தியா வெல்லும் அதிசயமும் நிகழும் என முன்னணி கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதற்கு ஒரு காரணத்தையும் அவர்கள் கூறுகின்றனர். இருபது ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் 16 முறை மோதியபோதும் ஆறு முறை இந்தியா வென்றுள்ளது. மேலும், தற்போது நியூ
சிலாந்தின் சில முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படுகின்றனர். அதேநேரம் இந்திய அணி முழு வலிமையோடு உள்ளது.
இந்திய அணியில் ரோகித் சர்மா, ராகுல், விராத் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, ஷமி ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா சொதப்பியது கடும் விமர்சனங்களைக் கிளப்பியது. முக்கியமான கட்டத்தில் ஆடத்தொடங்கிய அவர், 8 பந்து களில் 11 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். மேலும், காயம் காரணமாக அவர் பந்துவீச்சிலும் ஈடுபடவில்லை.
இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினின் அனுபவம் கைகொடுக்கும் என்று முன்னாள் ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ தெரிவித்துள்ளார். "அஸ்வின் பல டி20 போட்டிகளில் விளையாடி இருப்பதால் அவருடைய அனு
பவம் அணிக்கு உதவியாக இருக்கும். எனவே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அஸ்வினைக் களமிறக்க வேண்டும்," என அவர் பரிந்துரைத்துள்ளார். பாகிஸ்
தானுடன் மோதிய ஆட்டத்தில் இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறாதது சுட்டிக்காட்டப்பட்டது.

