மிலான்: டென்மார்க் தேசிய காற்பந்துக் குழுவின் மத்திய திடல் ஆட்டக்காரரான கிறிஸ்டியன் எரிக்சன் (படம்) தாம் விளையாடும் இத்தாலி காற்பந்துக் குழுவான இண்டர் மிலானுக்கு இந்தக் காற்பந்து பருவம் முழுவதும் விளையாட முடியாது என்று அந்தக் காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யூரோ 2020 காற்பந்துப் போட்டிகளின் ஓர் ஆட்டத்தின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திடலிலும் பின்னர் மருத்துவமனையிலும் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
டென்மார்க்குக்கும் ஃபின்லாந்துக்கும் இடையிலான அந்த ஆட்டத்தில் 29 வயது எரிக்சன் மாரடைப்பால் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மருத்துவமனையில் அவருக்கு 'ஐசிடி' எனும் இதய இயக்கக் கருவி பொருத்தப்பட்டது.
இதன் காரணமாகத்தான் இண்டர் மிலான் காற்பந்துச் சங்கம் தற்போதையை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தக் காற்பந்துப் பருவத்தில் அவர் விளையாட அனு
மதிக்கப்பட மாட்டார் என்னும் காரணத்தால் அவர் வேறொரு குழுவுக்கு விளையாடலாம் என்று அது கூறியது.
இத்தாலிய மருத்துவ ஆணையம் எரிக்சன் தொடர்ந்து இத்தாலியில் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளது.
மாரடைப்பு ஏற்பட்டு செயற்கை இதய இயக்கக் கருவி பொருத்தப்பட்டுள்ள ஒருவர் இத்தாலியில் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்ட காரணத்தை மேற்கோள் காட்டி மற்ற நாடுகளும் அவரை விளையாட அனுமதிக்காமல் போகலாம் என்றும் கருதப்படுகிறது.
எந்தெந்த நாடுகளில் இத்தகைய விதிமுறை உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கு முன்பு விளையாடிய டேலி பிலிண்ட்டுக்கு இதயத்தில் தசை அழற்சி பிரச்சினை இருந்ததால் அவருக்கும் 'ஐசிடி' பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் அவர் முழுமை
யாகக் குணமாகி, நெதர்லாந்தின் லீக் குழுவான அயக்ஸ் ஆம்ஸ்டடாம் குழுவுக்கும் நெதர்லாந்து தேசிய குழுவுக்கும் தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் மற்றொரு குழுவான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ் குழுவுக்காக ஆறரை காற்பந்துப் பருவம் விளையாடிய எரிக்சன், அக்குழு 2019 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் குழுவுடன் விளையாடிய ஆட்டத்தில் அங்கம் வகித்தார்.
பின்னர் 2020 ஜனவரி மாதத்தில் இண்டர் மிலான் குழு எரிக்சனை 16.9 மில்லியன் பவுண்ட்ஸ் விலை கொடுத்து வாங்கியது.

