சிங்கப்பூர்: ஆஸ்திரேலிய சைக்கிளோட்டப் பயிற்சிக் கழகத்துடன் சிங்கப்பூர் சைக்கிளோட்டச் சம்மேளனம் இணக்கக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இது, சிங்கப்பூரின் சைக்கிளோட்ட வீரர்களின் ஆற்றலை ேமம்படுத்த வகைசெய்யும்.
இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை நடப்பில் இருக்கும். ஒப்பந்தத்தின்கீழ் 'பிரோசைக்ளிங்எஸ்ஜி' உபகாரச் சம்பளத் திட்டத்திற்காக அடுத்த ஆண்டு அதிகபட்சமாக மூன்று சைக்கிளோட்டிகளை சிங்கப்பூர் சைக்கிளோட்டச் சம்மேளனம் தேர்ந்தெடுக்கும். அவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் உள்ளூர் சைக்கிளோட்டப் போட்டிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு கிட்டும். 2023ஆம் ஆண்டில் இத்திட்டத்தில் இடம்பெற நால்வர் வரை பரிந்துரைக்கப்படலாம். தேர்ந்தெடுக்கப்படுவோருக்குப் பயிற்சி நேரமும் அதிகம்.

