கலா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

கலா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

4 mins read
81b70cc6-6bed-42fe-bf06-d53d2f88e19b
கலா உற்சவத்தில் வசந்தம் பாய்சுடன் முகம்மது ரஃபியின் இசை நிகழ்ச்சி, 'மர்ம மேடை-தீர்ப்பு' நாடகப் படைப்பு, பரதா ஆர்ட்ஸ் வழங்கும் நாட்டிய நாடகப் படைப்பு ஆகிய அங்கங்கள் இடம்பெறுகின்றன. படங்கள்: எஸ்பிளனேட் தியேட்டர்ஸ் ஆன் தி பே -
multi-img1 of 3

கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பா­டு­க­ளுக்­கி­டையே எஸ்­பி­ள­னேட் கலை­ய­ரங்­கம் இன்று­மு­தல் களை­கட்ட உள்­ளது. கலா உற்ச­வத்­தின் 20வது ஆண்டு நிறைவை முன்­னிட்டு பல­ரை­யும் சுண்டி இழுக்­கும் துடிப்­பான நிகழ்ச்­சி­கள் இடம்பெ­ற­வுள்­ளன.

ஆண்­டு­தோ­றும் நடை­பெ­றும் இந்த இந்­திய கலை­விழா, இம்­மா­தம் 28ஆம் தேதி­யு­டன் நிறை­வு­பெ­று­கிறது. தீபா­வளி பண்­டிகைக் காலத்­தில் நடந்­தே­றும் இக்­க­லை­விழா, வெவ்­வேறு சமூ­கங்­கள் ஒன்­றிணைந்து கொண்­டா­டும் ஒரு தளத்தை அமைத்­துத் தரு­கிறது.

சிங்­கப்­பூ­ரர்­கள் கலைப் படைப்­பு­க­ளைப் பார்த்து ரசிப்பதை ஊக்­கு­விப்­ப­தும் இக்­கலை­வி­ழா­வின் சமூக நோக்­க­மா­கும். சிங்­கப்­பூ­ரர், இந்­திய கலை­ஞர்­கள் சங்­க­மித்­துத் தங்­க­ளின் லட்­சி­யத் திட்­டங்­களை நிறை­வேற்­ற­வும் தனித்­து­வ­மான படைப்­பு­களை இணைந்து உரு­வாக்­க­வும் வாய்ப்பு ஏற்­ப­டுத்­தித் தரப்­ப­டு­கிறது.

கலா உற்­ச­வம் தொடங்­கப்­பட்­ட­போது பார்­வை­யா­ளர்­களை ஈர்ப்­ப­தற்­காக புக­ழாளர்­க­ளின் வருகை நாடப்­பட்­டது. காலப்­போக்­கில், புது­வகை படைப்­பு­களை மேடை­ஏற்­று­வ­தற்­கான ஒரு சோத­னைக் கள­மாக இக்­க­லை­விழா மாறி­யது. கலை­யு­ல­கம் எல்­லை­யற்­றது என்­பதை உணர்த்­த­வும் அரிய, மறைந்­து­வ­ரும் நாட்­டுப்­பு­றக் கலை­வடி­வங்­க­ளுக்கு உயி­ரூட்­ட­வும் கலா உத்­ச­வம் முயன்று வரு­கிறது.

இந்­திய தூத­ர­கத்­தின் ஆத­ர­வு­டன் நடை­பெ­றும் இவ்­வாண்­டின் கலை­விழா­வில் பல­த­ரப்­பட்ட, பர­வ­சப்­ப­டுத்­தும் புத்­தாக்க முயற்­சி­க­ளைக் காண முடி­யும்.

கலை­வி­ழா­வின் ஓர் அங்­க­மாக 'ரஃப்பி 50 - ஏ மியூசிக்­கல் ஜூபிலி' இசை­நி­கழ்ச்சி இடம்­பெ­று­கிறது. சிங்­கப்­பூ­ரின் மூத்த கலை­ஞர் முகம்­மது ரஃபி­யின் 50 ஆண்டு இசை­ய­மைப்­புப் பய­ணத்­தைக் கொண்­டாடும் ஒரு நிகழ்ச்சி இது.

"அனைத்­து­லக ரசனை கொண்ட இசை­நி­கழ்ச்­சி­யாக இது இருக்­கும். வெவ்­வேறு பாணி இசை இதில் ஒலிக்­கும்," என்று தப்லா நாளி­த­ழி­டம் ரஃபி தெரி­வித்­தார்.

தென்­னிந்­திய, வட இந்­திய இசை­யமைப்­பை­யும் பாடல் வரி­க­ளை­யும் கொண்ட கல­வை­யாக இசை­நி­கழ்ச்சி அமை­யும் என்று குறிப்­பிட்ட அவர், இதில் 15 தமிழ்ப் பாடல்­களும் இரண்டு ஹிந்தி பாடல்­களும் இருக்­கும் என்­றார்.

நாடக ஆசி­ரி­யர் கிரேஸ் கலைச்­செல்­வி­யின் 'மர்ம மேடை-தீர்ப்பு' என்ற நாட­க­மும் கலா உற்­ச­வத்­தில் இடம்­பெ­று­கிறது. வானொ­லி­யில் ஒலி­ப­ரப்­பான எம்.கே.நாரா­ய­ண­னின் 'மர்ம மேடை' தொடர் நாட­கத்­தின் கதா­பாத்­தி­ரங்­களை மைய­மா­கக் கொண்­டது இந்த 'மர்ம மேடை-தீர்ப்பு'.

எஸ்­பி­ள­னேட் கலை­ய­ரங்க அறை­யில் 90 நிமி­டக் கதை­யில் ஐந்து வானொலி நாட­கப் படைப்­பு­க­ளு­டன் இது மேடை­யேற உள்­ளது. ஒவ்­வொரு நாட­கப் படைப்­பும் 30 நிமி­டத்­திற்கு நீடிக்­கும்.

"அசை­வு­கள், ஒளி ஒலி அமைப்பு, உடனே பொருள் புலப்­ப­டாத காட்­சி­கள் ஆகி­ய­வற்றை அதி­க­மா­கப் பயன்­ப­டுத்தி ஒவ்­வொரு கதை­யை­யும் வெவ்­வேறு வித­மாக வெளிப்­ப­டுத்­து­கிறது இந்த நாட­கம்," என்­றார் திரு­வாட்டி கலைச்­செல்வி.

ஒரே சம­யத்­தில் பல சம்­ப­வங்­கள் நடப்­பது போன்று காட்­டப்­ப­டு­வ­தால் பார்­வை­யா­ளர்­கள் நிச்­ச­யம் தங்­க­ளின் இருக்­கை­யை­விட்டு அக­லா­மல் இருப்­பர் என்­றும் அவர் குறிப்­பிட்­டார். இம்­மா­தம் 26, 27, 28 தேதி­களில் 'மர்ம மேடை-தீர்ப்பு' நாட­கம் அரங்­கே­று­கிறது.

கலா உற்­சவக் கலை­வி­ழா­வில் கேச­வன் சகோ­த­ரி­க­ளின் 'கானல்­வ­ரி­யும் காரிகை நிலை­யும்-மாத­வி­யின் கதை' என்ற பர­த­நாட்­டி­யப் படைப்­பும் இடம்­பெ­று­கிறது.

பார்­வை­யா­ளர்­களை மீண்­டும் கடந்த காலத்­திற்­குக் கொண்டு சென்று சிலப்­பதி­கா­ரத்­தின் மாதவி கதையை அறிந்­திடும் வாய்ப்பை இப்­ப­டைப்பு தரு­கிறது. இம்­மா­தம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை அரங்­கே­றும் இந்த நாட்­டிய நாட­கத்­தில் மயி­லாட்­டம், காவ­டி­யாட்­டம், பொய்க்­கால் குதிரை, கர­காட்­டம், ஒயி­லாட்­டம் போன்ற வெவ்­வேறு நாட்­டுப்­புற பாணி நடனங்கள் இணை­கின்­றன.

"தமிழ் இலக்­கி­யப் படைப்­பு­களில் முக்­கிய அங்­கம் வகிக்­கும் மாத­வி­யின் கதை, பெரி­தா­கப் பேசப்­ப­டு­வ­தில்லை," என்­றார் பரதா ஆர்ட்ஸ் நிறு­வ­னத்­தின் கலை இயக்கு­நர் திரு­வாட்டி ஜெயந்தி கேச­வன்.

மாதவி தம் மகள் மணி­மே­க­லை­யு­டன் பேசும் உரை­யா­டல்­கள்­வழி மாத­வி­யின் வளர்ச்­சி­யை­யும் உணர்­வு­க­ளை­யும் நாட்­டிய நாட­கம் வெளிச்­சம் போட்டு காட்­டும் என்­றார் அவர்.

சிங்­கப்­பூர் இந்­திய இசைக்­குழு, பாட­கர் குழு (என்­ஐ­ஒசி) படைக்­கும் 'ஆத்ம கானம்', இம்­மா­தம் 28ஆம் தேதி­யன்று எஸ்­பி­ள­னேட் நிகழ்ச்சி மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. 'எஸ்­ஐ­ஓசி'யின் 36வது ஆண்டு நிறை­வைச் சிறப்­பிக்­கும் இந்த 2 மணிநேர நிகழ்ச்­சி­யில் தாளம், மெல்­லிசை, பண்­ணிசை ஒரு­சேர அமைந்து கேட்­போரை லயிக்­கச் செய்­யும் என்­றார் என்­ஐ­ஓசி­யின் நிறு­வ­ன­ரும் நடத்­து­ந­ரு­மான திரு­வாட்டி லலிதா வைத்­தி­ய­நா­தன்.

"இந்­திய பாரம்­ப­ரிய ராகங்­கள் முதல் சம­கால இசை வரை பல நாட்டு இசை­யமைப்பை மன­தைக் கொள்ளை கொள்­ளும் காட்­சி­ய­மைப்­பு­டன் வழங்கும் இந்­தப் படைப்பு," என்­றார் அவர்.

கலா உற்­சவக் கலை­வி­ழா­வில் 'மெட்­டல்' இசை வாசிக்­கும் 'ருத்ரா'வின் படைப்பு இம்­மா­தம் 27ஆம் தேதி­யன்று நடை­பெ­ற­வுள்­ளது. 29 ஆண்­டு­களாக வெளி­வந்த எட்டு ஆல்­பங்­க­ளி­லி­ருந்து திரட்டப்பட்ட பாடல் இசைத்­தொ­குப்பை ருத்ரா இசைக்­குழு வாசிக்­கும்.

இசை­யு­டன் பூமி அன்­னையைக் கொண்­டா­டும் 'பூமி பிரா­ணம்', இம்­மா­தம் 20, 21 தேதி­களில் எஸ்­பி­ள­னேட் நிகழ்ச்சி மண்­ட­பத்­தில் அரங்­கே­றும். இதை வழங்­கு­வோர் டெம்­பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்.

நிகழ்ச்­சி­கள் குறித்­தும் நுழை­வுச்­சீட்டு விவ­ரம் குறித்­தும் அறிய www.esplanade.com/kalaautsavam இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்.