பூவையரை கவரும் மலர்க்கொத்துகள்

பூவையரை கவரும் மலர்க்கொத்துகள்

2 mins read
7bcf8ef8-885b-4963-af45-4a9dce98b64a
மலர்க்கொத்து நீண்டநேரம் நீடிப்பதற்கான பராமரிப்பு குறிப்புகளையும்திருவாட்டி பிரசிலா தமது வாடிக்கையாளர்களுடன்பகிர்ந்துகொள்கிறார். படம்: திகிஃப்ட்கார்டன்எஸ்ஜி இன்ஸ்டகிராம் -

மலர்க்­கொத்து பெறு­வ­தைப் பெண்­கள் பல­ரும் விரும்­பு­வர். அன்­பர் தினம், திரு­ம­ணம், பிறந்­த­நாள் எனக் கொண்­டாட்­டம் நடக்­கும் இடங்­களில் பூக்­க­ளை­யும் பூவை­யரை­யும் பிரிக்க முடி­யாது.

பழங்­கா­லத்து கிரேக்­கர்­கள், ரோமா­னி­யர்­கள், எகிப்­தி­யர்­கள் திரு­ம­ணங்­க­ளின்­போது வாசனை மிகுந்த மூலி­கை­க­ளைத் தங்­க­ளின் கைகளில் ஏந்­திச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது. தீயதை விரட்­டும் நோக்­கில் அவர்­கள் இந்த வழக்­கத்­தைப் பின்­பற்­றி­னர்.

விசு­வா­சம், மகிழ்ச்சி, பிள்­ளைப்­பேறு போன்­ற­வற்­றில் நம்­பிக்கை கொண்டு ஒரு புதிய துவக்­கத்­தைக் குறிக்­க­வும் பூக்­கள் பயன்­படுத்­தப்­பட்­டன. பின்­னர் விக்­டோரியா கால­கட்­டத்­திற்­குப் பின்­னரே இன்று நாம் காணும் திரு­மண மலர்க்­கொத்து வழக்­கம் வந்­தது என அறி­யப்­ப­டு­கிறது.

இன்று வாடிக்­கை­யா­ளர் விருப்­பத்­திற்கு ஏற்ப மலர்க்­கொத்தை வடி­வ­மைக்­கும் சூழல் வந்­து­விட்­டது. சிங்­கப்­பூ­ரில் பகு­தி­நே­ர­மாக மலர்க்­கொத்து உட்­பட அன்­ப­ளிப்­புப் பொட்­ட­லம், பூச்­செண்டு, பெயர் பொறிக்­கப்­பட்ட பரி­சுப்­பொ­ருள் போன்­ற­வற்­றைத் தயா­ரிக்­கும் திரு­வாட்டி பிரசிலா திஷா பிரதீப், 28, தமது கருத்­து­க­ளைத் தமிழ் முர­சு­டன் பகிர்ந்து­கொண்­டார்.

புதி­தா­கத் தொடங்­கி­யுள்ள தமது மலர்க்­கொத்து தயா­ரிக்­கும் வர்த்­த­கத்­திற்­குத் தம்­மு­டைய தந்­தை­யின் அச்சுப் பதிப்பகம் பெரி­தும் கைகொ­டுத்­த­தாக அவர் கூறி­னார்.

இத­னால் வாடிக்­கை­யா­ளர்­களுக்­குப் பிரத்தியேகமாக தயாரித்துத் தரும் சேவையையும் வழங்க முடி­வ­தாகக் கூறினார்.

பூக்­களை அழ­காக வைக்­கும்­போது தம் தாயா­ருக்கு ஏற்­பட்ட மகிழ்ச்­சி­யை­யும் மன அமை­தி­யை­யும் தாம் கண்­ணா­ரக் கண்ட பிறகு இதை ஒரு வியா­பா­ர­மா­க­வும் தமக்­குப் பிடித்த பொழு­து­போக்­கா­க­வும் தொடங்­கி­ய­தா­கக் கூறி­னார்.

இதன் தொடர்­பில் பயிற்சி வகுப்­புக்­குச் சென்ற பிரசிலா, சிறு மலர்க்­கொத்து தயா­ரிப்­ப­தி­லும் பல்­வேறு உத்­தி­கள் அடங்கி உள்­ள­தா­கக் கூறி­னார்.

தம்மை நாடி வருவோர் அல்லி, சூரி­ய­காந்­தி, நீலம், கறுப்பு, வண்­ண­ம­ய­மான ரோஜாக்­கள் ஆகி­ய­வற்­றைக் கேட்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், வாடிக்­கை­யாளர்­கள் விருப்­பம் மாறிக்­கொண்டே வரு­வ­தா­கச் சொன்­னார்.

சமூக ஊட­கங்­கள் வழி இவர் தமது வர்த்­த­கத்தை விளம்­ப­ரப்­ப­டுத்­திக்கொள்­ளும் அதே­வேளை, அதற்­கான விமர்­ச­னங்­களை அறிந்­து­கொண்டு தமது திற­மையை மேலும் வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

கூடு­தல் செய்தி:

கி.ஜனார்த்­த­னன்