வீட்டிலேயே தனிமையில் இருக்கவேண்டிய உத்தரவுகளை மீறியதாக வெளிநாடுகளில் இருந்து திரும்பிய இரண்டு சிங்கப்பூரர்கள் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த இரண்டு பேரில், லீ யி ஷெங் டிரைல் பால் என்பவர் ஒருவர். அவர் இந்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தார். வீட்டிலேயே தனிமையில் இருக்கவேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் லீ அடுத்த சில நாட்களில் பல முறை வெளியே சென்றார். லீ தெம்பனிஸ் சாஃப்ராவில் முவே தாய் வகுப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் டிசம்பர் 10ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.
குற்றம் சுமத்தப்பட்ட மற்றொருவர் ஜெராமிர் சிங் தோவா சிங் என்பவர்.
இவர் ஆகஸ்ட் 27ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தார். தொற்றுநோய் சட்டத்தின்கீழ் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

