தீவிர சிகிச்சை பிரிவில் குறையும் நோயாளிகள்: தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மேலும் கலந்துறவாட வாய்ப்பு ஏற்படும்

தீவிர சிகிச்சை பிரிவில் குறையும் நோயாளிகள்: தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மேலும் கலந்துறவாட வாய்ப்பு ஏற்படும்

2 mins read

மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறும் கொவிட்-19 நோயா­ளி­களின் எண்­ணிக்கை கொஞ்­சம் குறைந்து இருக்­கிறது.

தீவிர சிகிச்சை பிரி­வில் இருக்­கும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யும் முன்­பை­விட குறை­வாக இருக்­கிறது. இவற்­றின் விளை­வாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் கொஞ்­சம் அதிக சுதந்­தி­ரத்­து­டன் தங்­க­ளுக்கு இடையே கலந்­து­ற­வாடு­வ­தற்­கான வாய்ப்பு விரை­வில் ஏற்­ப­டக்­கூ­டிய நிலை உரு­வாகி வரு­கிறது என்று வல்­லு­நர்­கள் கருத்து கூறி இருக்­கி­றார்­கள்.

இருந்­தா­லும்­கூட தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத மக்­கள் தொடர்ந்து கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளு­டன் நடந்­து­கொள்ள வேண்­டிய வாய்ப்பு இருப்­ப­தாக அவர்­கள் மேலும் தெரி­வித்­த­னர். இம்­மா­தம் 18ஆம் தேதி வியா­ழக்­கி­ழ­மை­யன்று மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்ற கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 1,435 ஆக இருந்­தது.

தீவிர சிகிச்சை பிரி­வில் 60 நோயா­ளி­கள் செயற்கை சுவாசக் கரு­வி­க­ளு­டன் சிகிச்சை பெற்­ற­னர். 53 பேர் அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கப்­பட்­ட­னர்.

தீவிர சிகிச்சை பிரி­வின் ஒட்டு­மொத்த பய­னீட்டு விகி­தம் நவம்­பர் 18ஆம் தேதி 58.5% ஆக இருந்­தது. இது அதற்கு ஒரு நாள் முன்பு 62.6% ஆக இருந்­தது. இந்த மாத தொடக்­கத்­தில் இந்த அளவு 67.1% ஆக இருந்­தது. அக்­டோ­பர் 25ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரி­வின் பய­னீட்டு விகி­தம் 83.6% என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

படுக்­கை­க­ளின் எண்­ணிக்கை நவம்­பர் 16ஆம் தேதி 430 ஆக அதி­க­ரித்­தது. இது அக்­டோ­பர் முடி­வில் ஏறத்­தாழ 360 ஆக இருந்­தது. தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் குறைவுக்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறைக்குச் சுமை குறை­வ­தால் கட்­டுப்­பா­டு­கள் அக­லும் வேகம் சூடு­பி­டிக்­கிறது என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தின் தொற்­று­நோய் பிரிவு பேரா­சி­ரி­யர் டேல் ஃபிஷர் கூறி­னார்.

முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்­கான விதி­முறை­க­ளைத் தளர்த்­த­லாம் என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக சோ சுவீ ஹோக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளி­யின் துறைத் தலை­வர் பேரா­சி­ரி­யர் டியோ யிக் யிங் குறிப்பிட்டார்.

முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஐவர் சேர்ந்து வெளியே சாப்­பிட சிங்­கப்­பூர் அனு­ம­திக்­க­லாம் என்று தான் கரு­து­வ­தாக அவர் தெரி­வித்­தார். விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்­டால் அது முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு மட்­டுமே உரி­ய­வை­யாக இருக்­க­வேண்­டும் என்று பேரா­சி­ரி­யர் டியோ வலி­யு­றுத்­திக் கூறி­னார்.