பொதுமக்களுக்குத் துப்புரவை வலியுறுத்த காப்பிக்கடை கழிவறைகளுக்கு புதுத் தோற்றம்

பொதுமக்களுக்குத் துப்புரவை வலியுறுத்த காப்பிக்கடை கழிவறைகளுக்கு புதுத் தோற்றம்

2 mins read
2510547a-502d-45d1-88c1-55a3dbb4caee
சிராங்கூன் அவென்யூ 4ல் உள்ள 214வது புளோக்கில் இருக்கும் ஃபுட்ஹப் நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட கழிவறையை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் (இடது) பார்வையிட்டார். பொதுச் சுகாதார மன்றத்தின் தலைவர் எட்வர்ட் டி-சில்வா (நடு) உடனிருக்க, திருவாட்டி ஷென் பொ, 39, என்ற துப்புரவு ஊழியருடன் அமைச்சர் உரையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொது­மக்­கள் பொதுக் கழி­வ­றை­களைச் சுத்­த­மாக வைத்­தி­ருக்க ஊக்­க­மூட்­டும் வகை­யில், 10 காப்­பிக்­கடை கழி­வ­றை­கள், வீட்­டில் உள்ள கழி­வ­றை­க­ளைப் போலவே அலங்­க­ரிக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

சுவ­ரொட்­டி­கள், தடுப்­புச்­சு­வர் அலங்­கா­ரம், ஒட்­டுத்­தாட்­க­ளு­டன் அவை அலங்கரிக்­கப்­பட்டு இருக்­கின்­றன. உலக கழி­வறை தினத்­தை­ஒட்டி, பொது சுகா­தார மன்­றத்­தின் பொதுக் கழி­வறை துப்­பு­ரவு இயக்­கம் நேற்று தொடங்­கி­யது.

கழி­வறை தடுப்­புச் சுவர்­கள், கழி­வறை கற்­கள் பதித்த தோற்றத்­து­டன், சிறு­சிறு செடி­களை வைப்­ப­தற்­கான தாங்கிக­ளு­டன் அமைக்­கப்­பட்டு இருக்­கின்­றன. அவற்றை பார்த்­த­துமே வீட்­டுக் கழிவறை­யைப் போன்ற எண்­ணம் வரும்.

தங்­க­ளு­டைய வீட்­டில் இருக்­கும் கழி­வ­றை­யைப் போலவே பொதுக் கழி­வ­றை­க­ளை­யும் சுத்­த­மாக வைத்­தி­ருக்க வேண்­டும் என்ற உணர்வு பொது­மக்­கள் மன­தில் நன்கு நிலை­பெற இது உத­வும்.

இந்த அலங்­கார முயற்­சி­கள் கட்­டம் கட்­ட­மாக இதர 110 காப்­பிக்­க­டை­க­ளுக்கு டிசம்­பர் மாத வாக்­கில் விரி­வு­ப­டுத்­தப்­படும்.

பொதுக் கழி­வ­றை­க­ளுக்கு வெளியே தொண்­டூ­ழி­யர்­கள் இருப்­பார்­கள். அவர்­கள் கைத்­து­டைப்பு தாட்­களைக் கொடுப்­பார்­கள்.

கழி­வ­றை­யைப் பயன்­ப­டுத்­திய பிறகு தண்­ணீரை இழுத்­து­வி­டு­வது, தரையை ஈரப்­ப­டுத்­தாமல் இருப்­பது போன்ற நல்ல பழக்­கங்­க­ளைப் பின்­பற்ற தொண்­டூ­ழி­யர்­கள் பொது மக்களுக்கு ஊக்­க­மூட்டு­வார்­கள்.

நீடித்த, நிலைத்­தன்மை, சுற்­றுபுற மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஏமி கோர் இந்­தத் திட்­டத்­தில் பங்கு கொள்­ளும் ஒரு காப்­பிக்­க­டைக்கு நேற்று சென்­றார்.

சிராங்­கூன் அவென்யூ 4ல் இருக்­கும் அந்­தக் காப்­பிக்­க­டை­கழிவறைக்கு வெளியே சுவ­ரொட்டி­க­ளைப் பொருத்­திய அமைச்­சர், பொதுக் கழி­வ­றை­க­ளின் துப்புரவை வலி­யு­றுத்தினார்.

கொவிட்-19 போன்ற நோய்­கள் பர­வு­வ­தைத் தடுக்க துப்­பு­ர­வான கழி­வ­றை­கள் அவ­சி­யம் என்று அமைச்சர் விளக்கினார்.

பொறுப்­பு­டன் நடந்­து­கொள்­ளும்­படி பொது­மக்­களை அவர் வலி­யு­றுத்­தி­ கேட்டுக்கொண்டார்.

இத­னி­டையே, பொதுக் கழி வறை­க­ளின் துப்­பு­ரவு தரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு திட்­டத்­தின்­கீழ், முதல் தட­வை­யாக சிங்­கப்­பூர் பசு­மைக் கட்­டட தயா­ரிப்புச் சான்­றி­தழ் திட்­டத்­தின்­படி கழி­வறை தயா­ரிப்­புப் பொருட்­க­ளுக்­குச் சான்­றி­தழ் வழங்­கப்­படும்.