லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 325 இடங்களில் வெற்றி பெறும் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியில் கூறினார்.
"நாட்டின் அதிக மக்கள் தொகைக்கொண்ட மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். எங்களது மக்கள் பணிகள் மற்றும் சாதனைகள் காரணமாக தேர்தலில் அமோக வெற்றியைப் பெற முடியும்.
"பாஜக மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை பாஜக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் காட்டி யிருப்பதாகவும் அவர் கூறினார்.

