கேரளாவில் கொடூரக் கொலை: கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டு

1 mins read

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநி­லம் பத்­த­னம்­திட்டா மாவட்­டம் திரு­வல்லா தாலுகா பிரிங்­கரா பகுதி யைச் சேர்ந்த சந்­தீப் குமார், 34, என்ற மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சிக் குழுச் செய­லா­ளரை ஐவர் கும்­பல் கத்­தி­யால் 11 முறை கொடூர­மா­கக் குத்தி கொலை செய்­தது.

இந்­தச் சம்­ப­வம் அர­சி­ய­லில் பெரும் பர­ப­ரப்­பை­யும் பதற்­றத்­தை­யும் கிளப்பி இருப்­ப­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன. கொலை தொடர்­பில் கைதாகி உள்ள இரண்டு பேரும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்­த­வர்­கள் என உள்­ளூர்­வா­சி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, தங்­கள் கட்சி நிர்­வாகி சந்­தீப்­கு­மாரை ஆர்எஸ்எஸ் அமைப்­பி­னரே கொலை செய்­துள்­ள­தாக மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது. இதை அந்த அமைப்பு மறு­த்துள்ளது.