பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

1 mins read
f57fd851-016d-4a25-a193-b74f3b0f1c0f
பாகிஸ்தானுக்கு எதிராக கோல் போட்ட இந்திய வீரர் ஹர்மான்ஃபிரீத் சிங் (வலமிருந்து இரண்டாவது).படம்: ஏஎஃப்பி -

டாக்கா: ஆசிய வெற்­றி­யா­ளர் கிண்ண ஹாக்கி போட்­டி­யில் பாகிஸ்­தான் குழுவை 3-1 எனும் கோல் கணக்­கில் இந்­தியா நேற்று முன்­தி­னம் தோற்­க­டித்­தது. இப்­போட்டி பங்­ளா­தேஷ் தலை­ந­கர் டாக்­கா­வில் நடை­பெற்று வரு­கிறது. ஹர்­மன்­பி­ரித் சிங் இரண்டு கோல்­களும் ஆகாஷ்­தீப் சிங் ஒரு கோலும் போட்டு இந்­திய அணியை வெற்­றிப் பாதை­யில் கொண்டு சென்­ற­னர்.

பாகிஸ்­தான் அணி எவ்­வ­ளவு முயன்­றும் இந்­தி­யா­வின் அதி­ரடி ஆட்­டத்­துக்கு ஈடு­கொ­டுக்க முடி­யா­மல் தவித்­தது.

விறு­வி­றுப்­பாக நடை­பெற்ற ஆட்­டத்­தில் இரு­த­ரப்பு ஆட்­டக்­கா­ரர்­களும் தங்­கள் திறன்­களை வெளிப்­ப­டுத்­தி­னர்.

இருப்­பி­னும், கிடைத்த வாய்ப்­பு­ களை நன்கு பயன்­ப­டுத்­திக்­கொண்ட இந்­தியா வாகை சூடி­யது.

இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென்கொரியாவுடன் இந்தியா 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.

இரண்டாவது ஆட்டத்தில் பங்ளாதேஷ் அணியை 9-0 எனும் கோல் கணக்கில் அது பந்தாடியது.

பாகிஸ்தானைத் தோற்கடித்ததன் மூலம் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் அது ஜப்பானை நேற்று சந்தித்தது.