கோல்கத்தா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் தலைவரான கங்குலிக்குக்
காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது.
அவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கங்குலி முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாள்களுக்கு முன்பு
நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனு
மதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கங்குலி குடும்பத்தினர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்படைந்தனர்.

