துபாய்: ஜூனியர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு சிற்றரசுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகள் எடுத்து 259 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் இஜாஸ் அகமது 86 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சுலைமான் சபி 73 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா சார்பில் ராஜ்வர்தன், கௌஷல் தாம்பே, விக்கி மற்றும் ராஜ் பாவா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 260 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ராஜ் பாவா, கௌஷல் தாம்பே ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்தியா 262 ஓட்டங்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

