கிண்ணம் தாய்லாந்து கைசேர்வது திண்ணம்

கிண்ணம் தாய்லாந்து கைசேர்வது திண்ணம்

2 mins read

சுசுகி கிண்ண இறுதிச் சுற்று முதல் ஆட்டத்தில் 4-0 என இந்தோனீசியாவை வீழ்த்தியது

சிங்­கப்­பூ­ரில் நடந்­து­வ­ரும் ஆசி­யான் காற்­பந்­துக் கூட்­ட­மைப்­பின் சுசுகி கிண்­ணப் போட்­டி­களில் தாய்­லாந்து அணி வெற்­றி­யா­ள­ராக வாகை சூடு­வது கிட்­டத்­தட்ட உறு­தி­யா­கி­விட்­டது.

மொத்­தம் பத்து அணி­கள் இரு பிரி­வு­க­ளா­கப் பங்­கேற்ற சுசுகி கிண்­ணப் போட்­டி­களில் தாய்­லாந்­தும் இந்­தோ­னீ­சி­யா­வும் இறு­திச் சுற்­றுக்கு முன்­னே­றின.

இரண்டு ஆட்­டங்­கள் கொண்ட இறு­திச் சுற்­றின் முதல் ஆட்­டம் தேசிய விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று முன்­தி­னம் இரவு நடை­பெற்­றது.

ஆட்­டத்­தின் இரண்­டா­வது நிமி­டத்­தி­லேயே கோல­டித்து தாய்­லாந்­திற்கு முன்­னிலை பெற்­றுத் தந்­தார் சன­திப் சொங்­கி­ரா­சின். பின்­னர் இரண்­டாம் பாதி­யின் ஏழாம் நிமி­டத்­தி­லும் அவர் தம் பங்­கிற்கு இன்­னொரு கோலைப் போட்­டார்.

சுப்­ப­சொக் சராச்­சத் 67ஆம் நிமி­டத்­தி­லும் போர்­டின் ஃபாலா 83ஆம் நிமி­டத்­தி­லும் கோல­டிக்க, தாய்­லாந்து அணி 4-0 என்ற கணக்­கில் அபார வெற்­றி­பெற்­றது.

நடப்பு சுசுகி கிண்­ணப் போட்­டி­களில் ஆக அதி­க­மாக 18 கோல்­க­ளைப் போட்­டி­ருப்­பி­னும், இந்­தோ­னீ­சிய அணி­யி­ன­ரால் தாய்­லாந்­தின் தற்­காப்­பைத் தகர்த்து, வலையை நெருங்க முடி­யா­மல் போனது பெரும் சோகம்.

போட்­டிக்­குப்­பின் பேசிய தாய்­லாந்­து அணியின் தலைமைப் பயிற்­று­விப்­பா­ளர் அலெக்­சாண்­டர் போல்­கிங், "தாய்­லாந்து வீரர்­கள் சிறப்­பாக விளை­யா­டி­னர். அவர்­கள் இப்­படி நன்­றாக விளை­யா­டும்­போது பயிற்­று­விப்­பா­ள­ரின் பணி எளி­தா­கிறது," என்­றார்.

கடந்த செப்டம்பரில்தான் அவர் அப்பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை இரவு 8.30 மணிக்கு நடக்­க­வி­ருக்­கும் இரண்­டா­வது இறுதி ஆட்­டத்­தில் ஏதே­னும் அதி­ச­யம் நிகழ்ந்­தால் ஒழிய, தாய்­லாந்து அணி ஆறா­வது முறை­யாக சுசுகி கிண்­ணத்­தைக் கைப்­பற்றி, சாதனை படைப்பதைத் தடுக்க முடி­யாது.