சிங்கப்பூரில் முதன்முறையாக 'நீர் ஊடுருவும்' டென்னிஸ் திடல்

சிங்கப்பூரில் முதன்முறையாக 'நீர் ஊடுருவும்' டென்னிஸ் திடல்

1 mins read

முழு­மை­யாக நீர் உட்­பு­குந்து செல்­லக்­கூ­டிய டென்­னிஸ் திடல் சிங்­கப்­பூ­ரில் முதன்­மு­றை­யாக ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பொருள் அறி­வி­யல் நிறு­வ­ன­மான டௌ (Dow), 'ஸ்போர்ட் சிங்­கப்­பூர்' அமைப்­பு­ட­னும் 'பி.டி.ஸ்போர்ட்' நிறு­வ­னத்­து­ட­னும் இணைந்து, ஜூரோங் வெஸ்ட் டென்­னிஸ் மையத்­தில் அத்­தி­டலை அமைத்­துள்­ளது.

எவ்­வ­ளவு மழை பெய்­தா­லும் மழை­நீர் முழு­மை­யாக வடிந்து செல்­லும் வகை­யில் இந்­தக் கடி­னத் தரைத் திடல் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால், மழை நின்­ற­தும் விளை­யாட்­டா­ளர்­கள் திட­லுக்­குத் திரும்பி, ஆட்­டத்­தைத் தொட­ர­லாம்.

அத்­து­டன், இந்த 'கிரீன்­பேவ்' பூச்சு, தீங்கு விளை­விக்­கக்­கூ­டிய புற­ஊ­தாக் கதிர்­வீச்­சில் இருந்து திட­லைப் பாது­காப்­ப­தால் திட­லின் நிற­மும் மங்­காது.

மேலும், இந்த நீர் உட்­பு­கும் மேற்­ப­ரப்பு, உருளை மூலம் தரை­யைச் சமப்­ப­டுத்­தும்­போது ஏற்­படும் கழி­வு­க­ளை­யும் குறைக்க உத­வும். இத­னால், திட­லை­யும் நீண்­ட­காலத்­திற்­குப் பயன்­ப­டுத்­த­லாம்; பரா­மரிப்­பும் குறை­வா­கவே தேவைப்­படும்.