இரண்டு சக்கர இன்ப உலா

இரண்டு சக்கர இன்ப உலா

2 mins read
9a9d3f2c-849b-47a8-9d48-f5c58fa7eb15
சிராங்கூன் நார்த் பகுதியிலிருந்து மரினா பே சேண்ட்சுக்கு ரத்தினமாலா தம்முடைய கணவர் டினேஷுடன் மிதிவண்டி ஓட்டிச் சென்றார். -
multi-img1 of 2

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் சிங்­கப்­பூ­ரர்­கள் பலர் தங்­கள் கவ­னத்­தைப் பல்­வேறு பொழு­து­போக்­கில் செலுத்­தத் தொடங்­கி­யுள்­ள­னர். குறிப்­பாக, பல­ரும் மிதி­வண்டி ஓட்டு­வ­தில் தீவி­ர­மாக இறங்­கி­ உள்ள­னர்.

உட­லைக் கட்­டாக வைத்­துக்­கொள்­ள­வும் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளு­டன் பொழு­தைக் கழிக்­க­வும் தங்­களின் மன­ந­ல­னைப் பேண­வும் மிதி­வண்டி ஓட்­டு­வ­தில் மக்­கள் மோகம் கொண்­டுள்­ள­னர். வீட்­டில் இருந்­த­படி வேலை செய்­வது ஒரு புறம், விடு­மு­றைக்கு வெளி­நாட்­டுப் பய­ணம் மேற்­கொள்ள முடி­யா­தது மறு­பு­றம் எனத் தங்­க­ளுக்கு ஏற்­பட்ட நெருக்­க­டி­களை மக்­கள் இரண்டு சக்­க­ரங்­களில் உலா வந்து சமா­ளிக்­கின்­ற­னர்.

மடக்­கக்­கூ­டிய மிதி­வண்­டி­க­ளுக்­கான தேவை கடந்த ஆண்டு இத­னா­லேயே எகி­றி­யது. சில கடை­களில் காத்­தி­ருப்­புப் பட்­டி­ய­லில் மக்­கள் தங்­க­ளின் பெயர்­க­ளைக் கொடுத்­தி­ருந்­த­னர்; மற்­றும் பலர் பயன்­ப­டுத்­தப்­பட்ட மிதி­வண்­டி­க­ளை­யும் வாங்­கத் தயா­ரா­கி­னர்.

பூங்­காக்­க­ளை­யும் பூங்கா இணைப்­புக் கட்­ட­மைப்­பை­யும் பயன்­ப­டுத்தி மிதி­வண்டி ஓட்­டு­நர்­கள் தங்­க­ளின் பய­ணங்­க­ளைத் திட்­ட­மிட வேண்­டும் என்­ப­தற்­காகவே சிங்­கப்­பூர் நில ஆணை­யத்­தின் 'வொன்­மேப்' மூல­மாக இயங்­கும் 'ரைட்­என்­ஜாய்' (Ridenjoy) பய­ணச் செயலி கடந்த மாதம் செயல்­ப­டத் தொடங்­கி­யது.

அது­மட்­டுமா, கொள்­ளை­நோய் கால­கட்­டத்­தில் மிதி­வண்டி ஓட்­டு­வ­தற்­கு­ரிய பாதை­கள் தொடர்­பில் 'கூகல் மேப்ஸ்' வழி பல­ரும் தேடு­தல் மேற்­கொண்­டி­ருந்­த­னர். இதை­ அறிந்து கடந்த நவம்­பர் மாதத்­தில் மிதி­வண்­டிப் பய­ணப் பாதை­கள் தொகுப்பு ஒன்றை நிறு­வ­னம் தொடங்கி வைத்­தது.

மிதி­வண்டி ஓட்­டத் தொடங்­கி­ய­தற்கு ஒவ்­வொ­ரு­வ­ரும் வெவ்­வேறு கார­ணம் கூறி வர, தாதி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு­மதி ரத்­தி­ன­மாலா, தாம் கண்ட பலன்­களை தமிழ் முரசு­டன் பகிர்ந்­து­கொண்­டார்.

"முன்­க­ளப் பணி­யா­ள­ராக இருப்­ப­தால் நான் சில நேரங்­களில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்­டி­யி­ருக்­கும். என் மகன் இவ்­வாண்டு தொடக்­கப்­பள்ளி வாழ்க்­கை­யில் அடி­யெ­டுத்து வைத்­தி­ருக்­கி­றார். அவ­ரு­டன் நேரத்தை ஒன்­றா­கச் செல­வி­டு­வ­தற்கு இந்த மிதி­வண்டி ஓட்­டும் பொழு­து­போக்கே மிக ஏற்­ற­தாக இருக்­கிறது," என்­றார் திரு­மதி ரத்­தினா.

கண­வர் திரு டினேஷ் குமார், மகன் திரி­ஷான் டினேஷ் இரு­வரு­டனும் குடும்ப உறவை வலு­வாக்­கும் ஓர் இன்­ப­மான நட­வ­டிக்­கை­யாக மிதி­வண்டி ஓட்­டு­வது அமைந்­துள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"முத­லில் மிதி­வண்டி ஓட்­டு­வதில் என் கண­வர்­தான் நாட்­டம் காட்­டி­னார். அவர் காட்­டிய வழி­யில் நானும் என் மக­னும் மிதி­வண்டி ஓட்­டத் தொடங்­கி­னோம். எங்­கள் இல்­லப் பணி­யா­ளர் ஃபிட்ரா­வுக்­கும் நாங்­கள் மிதி­வண்டி வாங்­கித் தந்­தோம். நாங்­கள் குடும்­ப­மாக பொழு­தைக் கழிக்­கும் நட­வ­டிக்­கை­யாக இது மாறி­விட்­டது," என்­றார் இந்த இளம் தாயார்.

கூடு­தல் செய்தி: சி.சுபா­ஷினி