ஊர்க் கடிதம் வெவ்வேறு ஊர்களின் நிலவரங்களைப் பற்றி அந்தந்த ஊரில் வசிப்போர் எழுதும் 'ஊர்க் கடிதம்' சனிக்கிழமை தோறும் இடம்பெறும் சிரமமான காலகட்டம்; நம்பிக்கையில் மலேசியர்கள்

ஊர்க் கடிதம் வெவ்வேறு ஊர்களின் நிலவரங்களைப் பற்றி அந்தந்த ஊரில் வசிப்போர் எழுதும் 'ஊர்க் கடிதம்' சனிக்கிழமை தோறும் இடம்பெறும் சிரமமான காலகட்டம்; நம்பிக்கையில் மலேசியர்கள்

4 mins read
cc62bfae-ee37-4c81-bc3d-da03b407c58f
முழு முடக்கநிலை நடப்பில் இருந்தபோது, முள்வேலித் தடுப்பு வழியே இடம்பெற்ற உணவு வழங்கீடு. -
multi-img1 of 2

தனி ஒரு மனி­த­னுக்கு உண­வில்லை எனில் இந்த ஜகத்­தினை அழித்­தி­டு­வோம், என்று பாடி­னான் பாரதி. தனி ஒரு மனி­த­னின் உண­வுத் தேவை எவ்­வ­ளவு முக்­கி­யம் என்­பதை உணர்ந்தே இவ்­வாறு பாடி­னான் பாரதி.

அந்த வகை­யில் 2020, 2021ஆம் ஆண்­டு­கள் மலே­சி­யா­விற்கு நெருக்கடியான ஆண்­டு­க­ளா­கும். கடந்த ஈராண்­டு­க­ளாக மக்­கள் அளவுகடந்த துய­ரத்­தில் தவித்து வரு­கின்­ற­னர்.

கொவிட்-19 பெருந்­தொற்­றால் கிட்­டத்­தட்ட 30,000க்கும் மேற்­பட்ட மக்­கள் பலி­யா­கி­னர். பல லட்­சம் மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

பல லட்­சம் மலே­சி­யர்­கள் தங்­கள் வாழ்­வா­தா­ரத்தை இழந்­த­னர். வர்த்­த­கங்­கள் முடங்­கின.

நடுத்­தர மக்­க­ளின் அதா­வது பி40 பிரிவு மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டது.

நாட்­டில் வறு­மைக்­கோட்­டிற்­குக் கீழ் உள்ள ஏழை மக்­கள் ஒரு­வேளை உண­வு­கூட கிடைக்­கா­மல் தத்­த­ளித்­த­னர், தவித்­த­னர்.

கடந்த 2020ல் நாட்­டில் முழு ஊர­டங்கு கொண்டு வரப்­பட்ட போது, மலே­சிய அர­சாங்­கம் பல்­வேறு வகை­யில் மக்­க­ளுக்கு உதவி நல்­கி­யது. முதல் கட்­ட­மாக வரு­மான வரம்­பைப் பொறுத்து பல பிரி­வு­க­ளாக மக்­க­ளுக்கு உத­வித் தொகை வழங்­கப்­பட்­டது.

வாக­னங்­கள், வீட்­டுக் கடன்­க­ளுக்கு மாதாந்­தி­ரக் கட்­ட­ணம் செலுத்­து­வது 6 முதல் ஓராண்டு காலத்­திற்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. EPF எனப்­படும் ஊழி­யர் சேம­நிதி யில் இருந்து 10,000 வெள்ளி வரை மீட்­டு­கொள்ள அனு­ம­திக்­கப்­பட்­டது.

நடுத்­தர மக்­கள், பெரிய அள­வில் வர்த்­த­கம் செய்­ப­வர்­க­ளுக்கு சிறப்பு உதவி நிதி, வட்­டி­யில்லா கடன்­கள் வழங்­கப்­பட்­டன.

இவ்வாறு கடந்த ஈராண்டுகளாக அர­சாங்­கம் வழங்­கிய பல்­வேறு உத­வி­கள் மூலம் மலே­சி­யர்­கள் துன்பமான கால­கட்­டத்தை கடந்து சமா­ளித்து வந்­த­னர்.

மலே­சி­யா­வின் மக்­கள் தொகை கிட்­டத்­தட்ட 34 மில்­லி­ய­னா­கும். அர­சாங்­கத்­தால் எத்­தனை பேருக்­குத்­தான் உதவ முடி­யும்? இந்த சூழ­லில்­தான் மக்­கள் அரசு சாரா அமைப்­பு­க­ளின் உத­வியை நாட வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது.

இந்த அமைப்­பு­க­ளால் ஒரு குடும்­பத்­தின் தலை­யெ­ழுத்தை மாற்­றி­ய­மைக்க முடி­யும் என்ற நிலை­யில், நாடு தழு­விய நிலை­யில் ஆயி­ரக்­க­ணக்­கான அரசு சாரா அமைப்­பு­கள் மக்­க­ளுக்கு உத­வும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தன.

மக்­க­ளுக்கு மீன் கொடுப்­பதை விட மீன் பிடிக்­கக் கற்­றுக் கொடுக்­க­லாமே என்ற சிந்­த­னை­யில் நாடு தழு­விய நிலை­யில் இருக்­கும் பி40 பிரிவு நடுத்­தர மக்­கள் பல்­வேறு வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட உத­வின.

ஏற்­கெ­னவே வர்த்­த­கம் செய்து முடங்­கிப் போன­வர்­க­ளுக்­கும் புதி­தாக வர்த்­த­கம் செய்ய ஆர்­வம் உள்­ள­வர்­க­ளுக்­கும் வழி­காட்­டின.

இத்­த­கைய உத­வி­க­ளால் பல்­லா­யி­ரம் மக்­கள் இந்த சிர­ம­மான கால­கட்­டத்தை கடந்து வந்­த­னர்.

மலே­சிய மக்­கள் தங்­க­ளின் இறுக்­க­மான கால­கட்­டத்தை எதிர்­கொள்ள உதவி வழங்­கிய மற்­றொரு தரப்­பி­னர் தொழி­ல­தி­பர்­க­ளா­வர்.

மலே­சி­யத் தொழி­ல­தி­பர்­கள் பலர் தங்­க­ளது பகு­தி­களில் வசிக்­கும் மக்­கள் சிர­மங்­க­ளி­லி­ருந்து மீண்டு வர உத­வும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­னர்.

தேவை­யான நிதி­யு­தவி வழங்கி அவர்­க­ளுக்கு ஆர்­வ­முள்ள தொழி­லில் ஈடு­பட உத­வி­னர்.

ஒரு மாநி­லத்­தில் 10 தொழி­ல­தி­பர்­கள் 10 பேருக்கு உதவி வழங்­கி­னா­லும் 14 மாநி­லத்­தில் 140 பேர் பய­ன­டை­வார்­கள். இது­வொரு சிறிய கணக்­கு­தான். ஆனால், எத்­த­னையோ தொழி­ல­தி­பர்­கள் பல ஆயி­ரம் மக்­க­ளின் சுமையை குறைத்­துள்­ள­னர் என்­றால் அது மிகை­யாகாது.

தனி­யார் தொழில்­நி­று­வ­னங்­களும் சமூக உத­வித் திட்­டங்­களை மேற்­கொண்­டன. கொவிட்-19 பெருந்­தொற்­றில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேர்வு அடிப்­ப­டை­யில் வர்த்­த­கம் செய்ய வாய்ப்பு, வேலை வாய்ப்பு போன்­ற­வற்றை அமைத்­துத் தந்­துள்­ள­ன தனி­யார் தொழில் நிறு­வ­னங்­கள். இதன்­வ­ழி­யும் பல ஆயி­ரம் மக்­கள் பய­ன­டைந்து இந்த இறுக்­க­மான காலத்தை கடந்து வரு­கின்­ற­னர்.

அதே­நே­ரத்­தில், சிர­ம­மான காலத்தை சுய­மு­யற்­சி­யின் மூலம் தங்­க­ளால் மீண்டு வர­மு­டி­யும் எனும் கொள்­கை­யில் உள்ள மக்­களும் இருக்­கவே செய்­கி­றார்­கள்.

வீட்­டில் இருந்து ஏதா­வது ஒரு தொழில் செய்­ய­லாமே என்ற கொள்­கை­யில் செய­லில் இறங்­கி­ய­வர்­கள் பலர். பெருந்­தொற்று மலே­சிய மக்­க­ளுக்கு தன்­னம்­பிக்­கையை விதைத்­துள்­ளது. 2020ல் நடை­மு­றை­யில் இருந்த பொது முடக்­கத்­தின்­போ­தும், அதன்­பி­றகு மேற்­கொள்­ளப்­பட்ட தளர்­வு­க­ளு­டன் கூடிய நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை­யின்­போ­தும், பல சிறு வர்த்­த­கர்­கள் வீட்­டி­லி­ருந்தே தொழில் செய்­யத் தொடங்­கி­னர்.

'கிராப் ஃபுட்' 'ஃபுட் பாண்டா' மூலம் உணவு விநி­யோ­கம் செய்­வது, பொருள் விநி­யோ­கம் செய்­வது, வீட்­டில் தயா­ரிக்­கப்­படும் திண்­பண்­டங்­கள் விநி­யோ­கம் செய்­வது, பல­வகை உணவு வகை­களை தயா­ரித்து விற்­பது என்று தங்­கள் வரு­மா­னத்தை சுய­மாக தேடிக்­கொண்டு சமா­ளித்த மக்­கள்­தான் அதி­கம் என்­பது கண்­கூ­டா­கத் தெரிந்­தது.

"நமக்கு நாமே" எனும் தாரக மந்­தி­ரத்­து­டன் இந்த இறுக்­க­மான கால­கட்­டத்தை கடந்த மக்­கள் பல ஆயி­ரம் பேர்.

பெருந்­தொற்­றின் இறுக்­க­மான கால­கட்­டத்­தி­லி­ருந்து படிப்­ப­டி­யாக மீண்டு வந்த நிலை­யில், கடந்த டிசம்­பர் 17ஆம் தேதி நாடெங்­கும் ஏற்­பட்ட வெள்­ளத்­தில் பாதிக்­கப்­பட்ட பல ஆயி­ரம் மக்­க­ளுக்கு அரசு சாரா இயக்­கங்­கள் மீண்­டும் உத­விக்­க­ரம் நீட்­டின.

'நமக்கு நாமே' தாரக மந்­தி­ரத்­தில் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் உத­விக் கொள்­ளும் மனப்­பான்­மையை கிரு­மித்­தொற்­றும் வெள்­ளப் பேரி­ட­ரும் ஏற்­ப­டுத்­திய நிலை­யில் மக்­கள் அதில் இருந்து மீண்டு வரு­வ­தற்கு அரசு சாரா இயக்­கங்­கள், அர­சி­யல் கட்­சி­கள், தனி­ந­பர்­கள் என்று பல­ரும் போட்­டி­போட்­டு உத­வி­ய­தால் மக்­கள் ஓர­ள­வுக்கு அதில் இருந்து மீண்டு வந்­துள்­ள­னர்.

நாட்­டுக்கு நாடு உதவி, மக்­க­ளுக்கு மக்­கள் உதவி, வீட்­டுக்கு வீடு உதவி என்ற அடிப்­ப­டை­யில் செயல்­பட்­ட­தால் மக்­க­ளின் துய­ரம் ஓர­ளவு துடைக்­கப்­பட்­டுள்­ளது.

இது­வும் கடந்து போகும் எனும் நம்­பிக்­கை­யில் தாங்­கள் அனு­ப­விக்­கும் இந்த இறுக்­க­மான கால­கட்­டத்தை மக்­கள் கடந்து வரு­கின்­ற­னர்.