தைப்பூசத்தின் சிறப்புகள்

தைப்பூசத்தின் சிறப்புகள்

1 mins read

முரு­கக் கட­வு­ளுக்கு உகந்த தைப்­பூச விழா இன்று கொண்­டா­டப்­படு­கிறது. நட்­சத்­திர வரி­சை­யில் பூசம் எட்­டா­வது நட்­சத்­தி­ர­மா­கும். தைமாத பூச நட்­சத்­தி­ரம் பெரும்­பாலும் பௌர்­ண­மி­யில் வரும். இந்த தைப்­பூ­சத்தை முன்­னிட்டு முரு­கன் கோயி­லுக்கு விர­தமிருந்து பாத யாத்­தி­ரை­யாக வரும் பக்­தர்­கள் மார்­கழி மாத ஆரம்­பத்­தில் துளசி மாலை அணிந்து விர­தத்தை தொடங்­கு­வார்­கள்.

சஷ்டி கவ­சம், சண்­முக கவ­சம், திருப்­பு­கழ் போன்ற பாடல்­களை அன்­றா­டம் பாரா­ய­ணம் செய்து தைப்­பூச நாளில் முரு­கன் கோவி­லில் சிறப்பு வழி­பாடு செய்து விர­தத்தை முடிப்­பார்­கள்.

தைப்­பூ­சத்­தில் முரு­க­னுக்கு காவடி நேர்த்­திக்­க­டன், தலை­முடி காணிக்கை செலுத்­து­வ­தை­யும் பக்­தர்­கள் வழக்­க­மா­கக் கொண்­டுள்­ள­னர். இத்­தி­னத்­தில் புண்­ணிய நதி­களில் நீரா­டு­வதும் சிறப்­பா­கும்.