'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்ற பழமொழிக்கு ஏற்ப உப்பின்றி சாப்பிட முடியாது. எனினும், அதனை ஒரு அளவுடன் சேர்த்துக்கொள்வது முக்கியம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது இந்த உப்பு விஷயத்தில் நூறு விழுக்காடு பொருந்தும்.
அதிகப்படியான உப்பு நமது உடலை நோய்களுக்கான கூடார மாக்கிவிடும். அதேவேைளயில், உப்பில் இருக்கும் அயோடின் சத்து குறைபாட்டால் லட்சக்கணக்கான மக்கள் தைராய்டு பிரச்சினை யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சரிசெய்ய செயற்கையாக செறிவூட்டப்பட்ட அயோடின் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
இதனால், சருமத்தில் எரிச்சல், அடிக்கடி தாகம் எடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.
இந்த அயோடின் உப்புக்குப் பதிலாக இயற்கையான கடல் உப்பு, கறுப்பு உப்பு, சிவப்பு உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
ஐவகை உப்புகள்
இந்தியாவில் பழங்கால மக்கள் ஐவகை உப்புகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். சமுத்ரா எனப்படும் கடல் உப்பு, மண்ணில் இருந்து எடுக்கப்படும் உத்பேஜா, உறைந்து படிவங்களாக கிடைக்கும் ரோமகா உப்பு, அவுத்பிதா, சைந்தவா ஆகிய உப்பு வகைகள் பயன்படுத்தப்பட்டதாக சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம் நூலில் குறிப்பிடப்பட்டுளளது.
கல் உப்பு, இந்துப்பு
கல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தான் கல் உப்புக்குப் பதிலாக பொட்டாசியம் குளோரைடு உள்ள இந்துப்பைச் சமையலில் பயன்படுத்தும்படி சொல்கின்றனர்.
இமயமலையிலும் வடமாநிலங்களில் பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளிலும் பாறை களிலிருந்து இந்த இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது.
இந்துப்பில் உடலுக்குத் தேவை யான கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற பலவித சத்துகளும் உள்ளன. சித்த மருத்துவமும் இந்துப்புக்குத் தனி இடம் கொடுத்துள்ளது.
வெள்ளை நிற உப்பை சமையலில் அதிகமாகப் பயன்படுத்து வோம். ஆனால், கறுப்பு நிற உப்பு பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. உண்மையில், இந்த கறுப்பு உப்பில்தான் ஏராளமான தாதுக்கள், வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அத்துடன், கறுப்பு உப்பில் இரும்புச் சத்து, பொட்டாசியம், இதர தாதுக்களும் காணப்படுகின்றன.
கடல்நீரிலிருந்து நேரிடையாக இயற்கை முறையில் எவ்வித வேதிப்பொருளும் கலக்காமல் இருப்பதுதான் கடல் உப்பு.
உப்பை பரிசளித்த மக்கள்
சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்தும் பழக்கம் மக்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளதற்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளன. ருமேனியா நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் ஊற்று நீரை கொதிக்க வைத்து உப்பை பிரித்தெடுத்துள்ளனர். பண்டைய எபிரேயர்கள், கிரேக்கர்கள், ரோமானி யர்கள், பைசானியர்கள், எகிப்தியர்கள், இந்தியர்கள் போன்ற நாட்டினர் உப்பை பரிசளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
தரமறிய இரு குறிப்புகள்
இந்த உப்பின் தூய்மையைக் கண்டறிய இந்திய உணவுப் பாது காப்பு மற்றும் தர நிர்ணய ஆணை யம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) இரு உதவிக்குறிப்புகளை கூறியுள்ளது.
குறிப்பு 1: ஒரு குவளை தண்ணீரில் ஒரு மேசைக்கரண்டி உப்பை எடுத்து நன்றாகக் கலக்கவும். உப்பில் சுண்ணாம்பு கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அது வெண்மை நிறமாக மாறும். கரையாத பிற அசுத்தங்கள் அடியில் படிந்துவிடும்.
குறிப்பு 2: ஒரு உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, வெட்டப்பட்ட மேற்பரப்பில் லேசாக உப்ைபத் தூவிவிடுங்கள். ஒரு நிமிடம் காத்திருக்கவும். இப்போது இரண்டு மாதிரிகளிலும் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும். உப்பில் கலப்படம் இருந்தால், உருளைக்கிழங்கின் மேற்பரப்பு நீல நிறமாக மாறும்.

