சிறுவர்கள் விரும்பும் முட்டைப் பணியாரம்

சிறுவர்கள் விரும்பும் முட்டைப் பணியாரம்

2 mins read
572d6bf9-987a-4c21-b957-85566b5ca6c8
-

ஃப்ரூட் பணி­யா­ரம் குழந்­தை­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை அனை­வ­ருக்­கும் பிடித்­த­மான மாலை நேர சிற்­றுண்­டி­யாக உள்­ளது. இதையே முட்­டைப் பணி­யா­ர­மாக செய்துகொடுத்­தால் குழந்­தை­கள் காலை உணவை தவிர்க்­கா­மல் விரும்­பிச் சாப்­பி­டு­வார்­கள்.

காலை நேரத்­தில் பசி­யா­று­வதற்கு சிறந்த உண­வாக இருப்­பது முட்டை. அந்த முட்­டையை வழக்­க­மாக அரை வேக்­காட்­டில் செய்துகொடுக்­கா­மல், முட்டை அடை (ஆம்­லெட்), பொரி­யல் என்று ஒரே மாதி­ரி­யா­க­வும் இல்­லா­மல் வித்தியாச­மாக பணி­யா­ர­மாக செய்­து தரலாம்.

முட்­டைப் பணி­யா­ரத்துக்கு

தேவை­யான பொருட்­கள்:

இட்லி மாவு- ஒரு கப், முட்டை - 2, சின்ன வெங்­கா­யம் - 1, பச்சைமிள­காய் - 1, கறி­வேப்­பிலை - 1 கொத்து, கடுகு-தாளிக்க, உளுத்­தம்­ப­ருப்பு - தேவை­யான அளவு, உப்பு-தேவை­யான அளவு, எண்­ணெய்-2 மேசைக்கரண்டி.

செய்­முறை:

முட்­டையை ஒரு பாத்­தி­ரத்­தில் ஊற்றி நன்கு அடித்­துக்­கொள்ள வேண்­டும். அதை இட்லி மாவு­டன் சேர்த்து நன்­றாக கலக்­கிக்­கொள்ள வேண்­டும். அதன்பின் கடா­யில் எண்­ணெய் ஊற்றி காய்ந்­த­தும் கடுகு, உளுத்­தம் பருப்பு, நறுக்­கிய வெங்­கா­யம், பச்சைமிள­காய், கறி­வேப்­பிலை போட்டு வதக்கி மாவு­டன் நன்­றாக கலந்துகொள்ள வேண்­டும். அதன்பிறகு கல­வைக்கு ஏற்ப தேவை­யான அளவு உப்பு சேர்த்­துக்­கொள்ள வேண்­டும்.

அதன்பின்­னர் குழிப்­பணி யாரக்­கல்­லில் (படம்) சிறிது எண்­ணெய் ஊற்றி நன்­றாக காய்ந்­த­தும் முட்டை கலந்த மாவுக்­கலவையை ஒவ்­வொரு குழி­யி­லும் ஊற்­ற­வேண்­டும். மாவு வெந்­த­தும் பிரட்டி எடுத்­தால் சுவை­யான முட்­டைப் பணி­யா­ரம் தயார்.

 ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

 தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவிவிட்டு, கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

 காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அதில், சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

4. பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

5. தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

6. தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலெ ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.